சனி, 30 ஜூன், 2012

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் 12ம் நாள் பகல் திருவிழா..


தேர் ஏறினாள் பர்வதவர்த்தினியாள்




செல்வம் கொழிக்கும் ஊராம் உரும்பிராய் பதிதனில் நல்லாட்சி புரியும்   பரத்தைப்புலம் பர்வதவர்த்தினி அம்மன் ஆலய   வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா 03.06.2012 அதாவது இன்று பக்தி பூர்வமாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. சரியாக காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து சரியாக காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. பின்னர் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் பர்வதவர்த்தினியானவள்   உள் வீதி வலம் வந்து பின்னர் தேர் இருப்பிடம் நோக்கி சென்றது. பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன்
உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 11ஆம் திருவிழாவான கைலாய வாகனதிருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற உள்ளது. இன்று சரியாக மாலை 07.௦௦ மணியளவில் வசந்த மண்டப கிரியைகள் ஆரம்பம் ஆகி அதனை தொடர்ந்து மாலை 08.15 மணியளவில் விநாயகப் பெருமான் உள்வீதி உலா வந்து பின்னர் கைலாய வாகனத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இன்றைய திருவிழாவின்போது விசேட நாத இசைச் சங்கமம் மற்றும் தெய்வீகச் சொற்பொழிவும் இடம்பெற உள்ளது.

புதன், 27 ஜூன், 2012

இணுவில் கந்தசுவாமி ஆலயம்


யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் விளங்கும் இணுவில் கிராமம் சைவப் பண்பாட்டிற்கும் தமிழ், இயல், இசை, நாடகத் துறைக்கும் பெயர்பெற்ற கிராமமாக இன்றும் திகழ்கின்றது. இதற்கான காரணம் இக்கிராமத்தின்தொன்மையே ஆகும். அன்று இணையிலி என அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பின் பெயர் மருவி இணுவில்
என வந்ததாக ஆய்வாளர் கூறுவர். இக் கிராமத்தின் சைவப் பண்பாட்டிற்கு, இவ்வூரில் காணப்படும் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆலயங்களும் இயல், இசை நாடகத்துறை வளர்ச்சியும், முன்பே ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச்சங்கமும்

செவ்வாய், 26 ஜூன், 2012

யாழ் வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயம்


யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாயந்த ஆலயமாகும். 1266ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும்.

நல்லூரை அழகுபடுத்திய பரராசசேகரனே நாற்றிசைகளிலும் நகர்க் காவற்

நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு "யாழ்.விருது" வழங்கப்படுகின்றது.

நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையின் அமுதளிக்கும் அரிய பணியை கருத்தில் கொண்டு 2012 ஆம் ஆண்டுக்கான யாழ்.விருது வழங்கப்படுகின்றது.

இது தொடர்பாக :

யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடம் தோறும் வழங்கும்

இந்துசமயத்தை பற்றி ஒரு பார்வை

Picture

இந்து சமயம் ( Hinduism ) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது . பெரும்பாலன இந்துக்கள் இந்தியாவிலேயே வசிக்கின்றார்கள். நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.


பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று

ஞாயிறு, 24 ஜூன், 2012

புளியங்கூடல் மகாமாரி திருவிழா




30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...


அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்

நயினை ஸ்ரீ நாகபூசனி அம்மன்



நயினை மண்ணில் 24 மணிநேர மின் இணைப்பு....

நயினாதீவு பிரதேசத்திற்கு 24 மணிநேர மின் இணைப்பு நேற்றையதினம் (19.06.2012) வழங்கப்பட்டது.


இது தொடர்பாக.


நயினாதீவு பிரதேசத்திற்கு 24 மணிநேர மின்னிணைப்பினை வழங்குவதற்காக அரச தரை தட்டிக் கப்பல் உதவியுடன் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான,500 KP மின் இயந்திரம் ஒன்று (12 .06 .2012) அன்று காலை எடுத்து வரப்பட்டது.

இதன் பொருட்டு நயினாதீவுக்கு 24 மணித்தியாலய மின்சாரம் என்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்
டது.

அதன் படி நேற்றைய தினம் (19.06.2012) நயினைத் தாயவள் கொடியேற்றத்துடன் நயினை மக்கள் வாழ்வில் மின் ஒளியேற்றப்பட்டது.


நயினை மக்கள் வாழ்வில் ஒளி கொடுக்க வந்து இறங்கிய மின்சார பிறாக்கி..

நயினை மக்கள் வாழ்வில் ஒளி கொடுப்பதற்காக நயினாதீவு தெற்கு இறங்கு துறைப்பாலத்தில் வந்து இறங்கியது இலங்கை மின்சாரசபையின் 500 kp கொண்ட இராட்சத மின்சார பிறாக்கி..


நயினை மண்ணுக்கு 24

அறுகம்புல் வழிபாடு

ஒருநாள் கணேசன் கைலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்த போது நந்தி வந்தது ‘தீர்க்கதரிசியே சேர்களெல்லாம் தங்களை காண வந்துள்ளார்கள்’ என்றது ‘அவர்களை வரச்செல்’ என்றார். ‘நீங்கள் எல்லாம் ஏன் வருத்தத்தோடு உள்ளீர்கள்?’ அனலாசூரன் என்னும் அரக்கன் எங்களுக்கு சொல்லொண்ணாத் துயரை அளக்கிறான்’.

அனலாசூரன் அருகில் செல்ல முடியவில்லை. ஆவன் வாயிலிருந்து

பிள்ளையாரின் வாகனம்






முன்னொரு காலத்தில் யானை முகம் கொண்ட ‘கயாசுரன்’ என்ற பலம் பொருந்திய ஓர் அசுரன் வாந்து வந்தான் எதிரிகள்ளரகிய தேவர்களை அடக்கி வெற்றிவாகை சூட வேண்டும் தனது எண்ணம் டேர சிவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான் கயாசுரன் சிவன் அவண் முன் தோண்றி கோட்ட வரம் அளிப்பார்.

பெருமானே என் போன்ற கறுத்த முகம் உடைய ஒருவனால் மட்டுமே

வியாழன், 21 ஜூன், 2012

நயினை ஸ்ரீ நாகபூசணி கோயில்

நயினை ஸ்ரீ நாகபூசணி கோயில்

நயினாதீவு, யாழ்ப்பாணம்

அன்பாயும் சிவமாயும், அருளாயும் பொலிவாயும், துன்பத்தில் இன்பமாகவும், வறுமையில் செழிப்பாகவும், பேதமையில் பேரறிவாகவும் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டவளாகவும் விளங்குபவள் பராசக்தியாகிய அன்னை அன்னையாகப் போற்றப்படும் சக்தியானது. அண்டங்களிலுள்ள உயிர்களையெல்லாம் அரவணைத்து, அன்பு செலுத்தும் பேரருட் சக்தி என்று போற்றப்படுகின்றது. தனது காட்சியாலும், உணர்வாலும், திருவருட்பொலிவாலும், பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து காட்சியளிப்பவள் அன்னை பராசக்தி, சிவமானது அறிவு என்றால், சக்தி ஆற்றலாகக் காணப்படுகின்றது. எங்கும், எதிலும் உயிர்கொடுத்து இயக்கும் சக்தியைப் (Energy) பராசக்தி என்று இந்துக்கள் போற்றுவர். உலகிலே விஞ்ஞானரீதியாகச் சடப்பொருள், சக்திப்பொருள் என இருபொருள் உண்டென்பர். சடமும், சக்தியும் இணைந்து செயற்படும்போது செயலும், இயக்கமும் ஏற்படுகின்றது. எனவேதான் சக்தியின்றிச் சிவமில்லை, சிவமின்றிச் சக்தியில்லை என்ற பொருள் நிறைந்த மரபு இந்துக்களிடையே காணப்படுகின்றது. சக்தியற்றுக் கிடக்கின்றவனைப் பார்த்து, சிவனே என்று கிடக்கின்றான் என்று கூறும் தன்மை, இந்துசமுதாயத்திலே

நயினை நாகபூசணி அம்மன் பற்றிய சிறப்புப் பார்வை




அன்பாயும் சிவமாயும், அருளாயும் பொலிவாயும், துன்பத்தில் இன்பமாகவும், வறுமையில் செழிப்பாகவும், பேதமையில் பேரறிவாகவும் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டவளாகவும் விளங்குபவள் பராசக்தியாகிய அன்னை அன்னையாகப் போற்றப்படும் சக்தியானது; அண்டங்களிலுள்ள உயிர்களையெல்லாம் அரவணைத்து, அன்பு செலுத்தும் பேரருட் சக்தி என்று போற்றப்படுகின்றது.

தனது காட்சியாலும், உணர்வாலும், திருவருட்பொலிவாலும், பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து காட்சியளிப்பவள் அன்னை பராசக்தி, சிவமானது அறிவு என்றால், சக்தி ஆற்றலாகக் காணப்படுகின்றது. எங்கும், எதிலும் உயிர்கொடுத்து இயக்கும் சக்தியைப் (Energy) பராசக்தி என்று இந்துக்கள் போற்றுவர். உலகிலே விஞ்ஞானரீதியாகச் சடப்பொருள், சக்திப்பொருள் என இருபொருள் உண்டென்பர். சடமும், சக்தியும் இணைந்து செயற்படும்போது செயலும், இயக்கமும் ஏற்படுகின்றது. எனவேதான் சக்தியின்றிச் சிவமில்லை, சிவமின்றிச் சக்தியில்லை என்ற பொருள் நிறைந்த மரபு இந்துக்களிடையே காணப்படுகின்றது. சக்தியற்றுக் கிடக்கின்றவனைப் பார்த்து, சிவனே என்று கிடக்கின்றான் என்று கூறும் தன்மை, இந்துசமுதாயத்திலே காணப்படுகின்றது. சிவமும், சக்தியும் உலக

நாகபூசணி அம்மன் ஆலய வரலாறு


விடையத்தைப் பெரிதாக்கிப் பார்ப்பதற்கு
உங்கள் கணிப்பொறியின் சொடுக்கியால் பக்கத்தை அல்லது ஒளிப்படத்தை ஒருமுறை அழுத்தவும்.


இலங்கையின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின் நடுநாயகமாய் அமைந்தது ஒரு சிறிய தீவு . நகரில் இருந்து ஏறக்குறைய இருபது கல் தொலைவில் தென்மேற்கே அலை கடல் நடுவே அருள் ஒளி பரப்பி நிற்பது . இதுதான் நயினாதீவு உருவால் சிறியதாயினும் அருளின் பொலிவால் சிறந்து விளங்கும் இத்தீவு பழைய காலம் தொட்டே பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டது. நாகதீவு (நாகதீபம்) , நாகநயினாதீவு (வையாபாடல்) , மணித்தீவு (செளந்தர்யலகரி) , மணிபல்லவத்தீவு ( மணிமேகலை) , சம்புத்தீவு (யாழ்ப்பாணச் சரித்திரம் - யோன் ஆசிரியர்) , பிராமணத்தீவு (ஒல்லாந்தர் காலம்) என்பன அவற்றுள் சில.


 புகழ் பூத்த இச் சிறிய தீவின் பெருமைக்கு அணியாய் இன்றும் சிறப்புற்று விளங்கும் ஆலயங்கள் பல. ஆதி மனிதன் தன் சிந்தனைக்கும் செயலுக்கும் மேலாக மூலமாய் நின்று வழிநடத்திச் செல்லும் சக்தி ஒன்று உண்டென்று ஒரு கால் உணர்ந்தான். மனம் வாக்கைக் கடந்து உள்நின்ற அப்பொருளைக் கடவுள் என்று அழைத்து வழிபடத்தொடங்கினான். அக் காலத்தில் இருந்தே இச்சிறிய தீவில் தொன்மையான வழிபாட்டு நெறி இருந்து வந்துள்ளது என்பது வெளிநாட்டு நல்லறிஞர் பலருக்கும் ஒப்ப முடிந்த ஒரு கருத்தாகும்.



இத்தீவு வாசிகளில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தவர். இவர்களின்

திங்கள், 18 ஜூன், 2012

மதுரை ஆதினத்திற்கு நித்தியானந்தா தகுதியானவரா?: ஓர் அலசல்

மதுரை 293வது ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள சுவாமி நி்த்தியானந்தா கடந்த 2010ம் ஆண்டிற்கு முன்பு வரை உலக ஆன்மீகத் தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டவர். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் ஆன்மீக ரசிகர்களை தன் பால் ஈர்த்துக் கொண்டவர்.
இந்நிலையில், நித்தியானந்தாவும் நடிகை
ரஞ்சிதாவும் இணைந்த காணொளிக் காட்சிகள் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் எரிமலை போல் வெடிக்கத் தொடங்கியது. ஒரு சாதாரண
மனிதன் இந்த காரியத்தை செய்தால் இந்த சமுதாயம் கண்டுகொள்ளாது. ஆனால் நான்கு பேர் மதிக்கக்கூடிய ஒரு ஆன்மீகத் தலைவர் செக்ஸ் விடயங்களில் ஈடுபட்டு, அது பகிரங்கமாக
வெளிப்படுத்தப்பட்டால் என்னவாகும் என்று 2010ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை வெடித்து வருகின்ற காட்சிகளின் மூலம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்த விவகாரத்தில் சிக்கி கைதான நித்தியானந்தா ஒன்றரை மாதங்கள் கழித்து வெளியே வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மதுரை ஆதீனமடத்தின் 293வது இளைய சன்னிதானமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டார். முடிசூடிய சில மணி நேரங்களிலேயே, நடிகையுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட நித்தியானந்தா,

சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர்

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அம்பலவாண பிள்ளைக்கும் சிதம்பரவம்மையாருக்கும், இரண்டாவது மகவாகச் சாலிவாகன சகாப்தம் 1775க்குச் சமமான பிரமாதீச வருடம் தை மாதம் 18ம் நாள் (கிறீஸ்து வருடம் 1855) இல் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் தோன்றினார். இவரது சகோதரிகள் சிவகாமியம்மையும், காமாட்சியம்மையும் ஆவார்கள். முத்துக்குமாரக் கவிராயரின் தம்பியாகிய சின்னத்தம்பி குமாரசாமிப்புலவரின் பாட்டனாவார்.
ஐந்து வயதடைந்த குழந்தை குமாரசுவாமி குலகுருவாகிய வேதாரணீயம் நமசிவாய தேசிகரால் வித்தியாரம்பஞ் செய்து வைக்கப்பெற்றார். எழுத்து வாசிப்பு என்பவற்றை வீட்டிலேயே தந்தையாரிடம் கற்றுக்கொண்ட குமாரசுவாமிப்புலவர், மல்லாகம் ஆங்கில பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நான்காவது வகுப்பில் கற்றுக்கொண்டிருந்த போது தந்தையார்

சி. வை. தாமோதரம்பிள்ளை

cvdhamo1இராவ்பஹதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னுங் கிராமத்திலே வைரவநாதபிள்ளை என்பாருக்கும், அவர் பத்தினியாராகிய பெருந்தேவி என்பாருக்கும் சிரேட்ட புத்திரராய் 1832 செப்டெம்பர் 12 இலே பிறந்தார்கள்.
சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய பருவத்திற் கல்வி பயிலத்தொடங்கி, வாக்குண்டாம், நன்னெறி, மூதுரை, திவாகரம், உரிச்சொல் நிகண்டு முதலிய நூல்களை ஐயந்திரிபறக்கற்றுணர்ந்து, சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர்பால் அடைந்து, நைடதம், பாரதம், கந்தபுராணம் முதலிய இலக்கியப்

வேலணை பேரம்பலப்புலவர்

யாழ்ப்பாணத்து வேலணையூரில் 1859ம் ஆண்டு தை மாதம் 21ம் திகதி கோணமலை சிவகாமியம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்தான் பேரம்பலப் புலவர்.
ஐந்தாம் வயதில் வித்தியாரம்பம் செய்விக்கப்பெற்ற பேரம்பலம் சிறுவயதிலேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு
செய்யுளியற்றுவதிலும் சிறப்புற்று விளங்கினார். 12ம் வயதில் நண்பன் ஒருவனிடம் இருந்து அகராதி ஒன்றை பெற விரும்பிய பேரம்பலம் இன்னுமொரு நண்பனூடாக செய்யுளால் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அச்செய்யுள் வருமாறு.
சாந்தலிங்கம் என்றிச் சகம்பழிச்ச வாழ்வுகூர்
சாந்தலிங்க சோதிடநற் சாகரமே – ஓர்ந்தும்
அகராதி தன்னை அனுப்புஞ் சிலசொல்
நாவமாக நானுணரத் தான்
பேரம்பலத்தின் கூரிய அறிவை யவதானித்த புலவர் கனகசபைப்பிள்ளை பேரம்பலத்தை வலிந்தழைத்து நிகண்டு, பாரதம், நைடதம், ஏனைய இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாவற்றையும் கற்வித்தார். கந்தப்பிள்ளை என்பாரிடம் தேவார திருவாசகங்கள், சைவசித்தாந்த சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்தார். சோதிடக்கலை வல்லாரிடம் சோதிடக் கலையையும் கற்றுணர்ந்தார். இவரின் புலமையை கண்ட நொத்தாரிஸ் முருகேசு என்பார் இவரையழைத்து தனது எழுத்தாளராக நியமித்துக்கொண்டார். அங்கே சிலநாட்கள் மட்டுமே பணிபுரிந்த பேரம்பலம் வேளான் தொழிலை செய்யத்தொடங்கினார். ஓய்வு நேரங்களில் தம்மிடங் கற்க வேண்டுமென விரும்பி வருபவர்களுக்கு பாடஞ் சொல்லிக் கொடுத்தார். அதே வேளை தமது ஊரை நெறிப்படுத்தி வளர்ப்பதிலுங் கருத்துச் செலுத்தினார்.
தனிப்பாடல்கள் பலவற்றை பாடிய பேரம்பலப் புலவர் இலந்தைக்காட்டு சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை, வண்ணைச் சிலேடை வெண்பா, கடம்பர் யமகவந்தாதி முதலாய நூல்களையும் இயற்றியுள்ளார்.
பெரியநாச்சிப்பிள்ளை என்னும் மங்கை நல்லாளை மணம்முடித்த பேரம்பலப்புலவர் அவரின் மறைவின் பின் வள்ளியம்மை என்பாரை மணந்துகொண்டார்.
குமாரசுவாமிப்பிள்ளை, நமசிவாய தேசிகர், வண்ணை வைத்திலிங்கம்பிள்ளை முதலிய புலவர்களின் பாராட்டை பெற்ற பேரம்பலப்புலவர் தமது எழுபத்தாறாவது வயதில் 1935ம் ஆண்டு புரட்டாதி மாதம் 18ம் திகதி சிவனடி சேர்ந்தார்.

ஆறுமுக நாவலர்


navalar1ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாளர் மரபில், பாண்டி மழவர் குடியில், சலிவாகன சகாப்தம் 1745 இற்கு சரியான கி.பி 1822ம் வருடம் மார்கழி மாதத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமியார். இவரது ஆறாவது குழந்தையாக பிறந்த இவர் ஐந்து வயதில் வித்தியாரம்பஞ் செய்யப்பெற்று சுப்பிரமணியர் என்னும் உபாத்தியாயரிடம் கல்வி கற்று, அப்பால் பன்னிரு வயதில் அவ்வூரிலிருந்த வேலாயுதமுதலியாரிடம் சென்று இலக்கிய இலக்கணங்களை வாசித்து, மறுபடி இருபாலையிலிருந்த வித்துவசிரோமணியாகிய
சேனாதிராச முதலியாரிடமும், வண்ணார்பண்ணையிலிருந்த மனப்புவி முதலியார் சரவணமுத்துப்புலவரிடமும் அரிய நூல்களை கற்றுத்தேர்ந்தார். இவர் தமிழ் வித்துவான்களின் சகாயத்தால் அரிய தமிழ் நூல்களை கற்றுத்தெளிந்து தமிழில் பாண்டித்தியம் பெற்றதோடன்றி சமஸ்கிருதத்திலும் மிகு பயிற்சியுடையவராய் உவெஸலியன் மிசன் பாடசாலையில் ஆங்கில பாசையும் கற்று 20 வயதிலே அப்பாடசாலைத்தலைவரான பீற்றர் பேர்சிவல் பாதிரியாருக்கு தமிழ்ப்பண்டிதராகி வேதாகம மொழிபெயர்ப்பில் அவருக்கு நல்ல உபயோகியாகி விளங்கினார்.
1845ம் வருடம் வரை அவருடன் துணையாயிருந்து வந்த ஆறுமுக நாவலர் அதன்பின் அந்தவேலையை விட்டுவிட்டு தம்மூரிலே சைவசமயத்தை வளர்க்கவும், பாடசாலைகளை தாபிக்கவும், பிரசங்கஞ்செய்யவும், கருத்துட்கொண்டாராகி ஏறத்தாள 32 வருடங்கள் அம்முயற்சியிலேய தன் வாழ்நாளை செலவிட்டார். வண்ணார்பண்ணை புலோலி முதயில இடங்களின் மட்டுமன்றி, தென்னிந்தியாவிலே சிதம்பரத்திலும் ஒரு பாடசாலையை தாபித்தார். இவர் சைவரிடம் காணும் குற்றங்களை வழக்கமாக கண்டிப்பாராதலால் அவருட்பலபேர் இவருக்கு சத்துருக்களானார்கள். அத்தோடு மட்டுமன்றி இவர் தம்மத்ததை சிரமேற்கொண்டு கிறீத்துவத மதத்தையும் சாடுவாராகி அம்மதத்துக்கு விரோதமாய் பல புத்தகங்களை அச்சிட்டு வெளிப்படுத்தினார். நாவலர் அவர்கள் வண்ணார்பண்ணையிலும் பின் சென்னையிலும் அச்சிந்திரசாலைகளை தாபித்தார்.
கந்தபுராணம், சேதுபுராணம், பிரயோக விவேகவுரை, திருவள்ளுவர் பரிமேலழக ருரை, தொல்காப்பியம் சேனாவரையருரை, நன்னூல் காண்டிகையுரை விருத்தியுரை, நிகண்டு சூடாமணியுரை, இலக்கணக்கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி, கோயிற் புராணவுரை ஆகிய சிறயனவும் பெரியனவுமான அறுபதுக்கு மேற்பட்ட புத்தகங்களை திருத்தி அச்சிட்டு பிரசுரித்தார். இவர் பழையபாடல்கள் உரைகளை திருத்தி அச்சிடுவித்ததோடு மட்டுமன்றிச் சிலவற்றிற்கு புத்துரைகள் எழுதியும், பாலபாடம், சைவவினாவிடை, இலங்கை பூமிசாத்திரம், இலக்கணச் சுருக்கம் ஆகிய பாடசாலைப்புத்தகங்கள் பலவற்றை புதிதாயுமியற்றினார். பெரிய புராணத்தோடு சிதம்பர மான்மியத்தை வசனநடையில் செய்தார். பாடுந்திறனிலும் இவர் சளைத்தோரல்லர். இவர் பாடிய கீர்த்தனங்கள் சில கதிரையாத்திரை விளக்கத்திற் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. கீர்த்தனங்களன்றித் தனிப்பாக்களும் பாடினார். இரகுவம்சத்தை பதிப்பிக்க முயன்றார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டிகள் சிலரின் வேண்டுகொளுக்கிணங்கி தேவகோட்டை தலபுராணத்தை ஐநூறு செய்யுள்வரையும் பாடினாரென்றும் கேள்வி.
இவர் பாடிய ஒரு தனிவருத்தம் வருமாறு
சீர்பூத்தகருவி நூலுணர்ச்சிதேங்கச்சிவம் பூத்தபிரணவமோர் வடிவமானோன்
ஏர்பூத்தவடியர் செயன்முற்றுமாற்றானியல் பூத்ததிருவருள் செய்தெங்குநின்றோன்
பார்பூத்தவீழவள நாட்டின்மேவும்பயன் பூத்ததிருநல்வலப்பதியில் வாழுங்
கார்பூத்தகரிமுகவன் றனதுபாதங்கரம் பூத்தமலர்கொண்டே கருத்தில்வைப்பாம்.
சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும்தொண்டாற்றி தமிழ்நாடெங்கணும் தனக்கிணையில்லதாராய் திதழ்ந்த நல்லை நகர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தனது ஐம்பத்தாறாவது வயதில் தேகவியோகமாயினார். அவரது சிவபதத்தின் பேரிற் புலவர்கள் பலர் பற்பல சமரகவிகள் சொற்றனர். அவற்றுள் சுன்னாகம் குமாரசுவாமிப்பிள்ளையின் வினாவுத்தரவெண்பா.
ஐந்தின்பின்னாவதென்ன வானனத்தின் பேரென்ன
முந்துநடுவில் மொழியென்ன – இந்திரற்கு
மாறுகொண்டோன்பேரென்ன வாக்கில் மிகவல்ல
ஆறுமுகநாவலனேயாம்.
சிலகாலமாக பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளையை ஆசிரியராக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த சைவஉதயபானு பத்திரிகையும் ஆறுமுகநாவலர் செய்த முற்பிரயத்தனங்களை வித்தாய்க்கொண்டே உற்பத்திபெற்றது

பெருங்காடு சிவன் கோயில்

மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.
யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை
ந்து மதத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணவ வழிபாட்டுக்கென யாழ்ப்பாணக்குடாநாடெங்கும் விஷ்ணு ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்து கோண்டாவில் கிழக்கில் அமைந்திருக்கும் வல்லீபுரநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார். ஏறத்தாள முந்நூறு ஆண்டுகளின் முன்னர் ஒரு மடாலயமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டதாக கூறுவர். நீண்ட காலமாக சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்த இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிடேகம் 1981ம் ஆண்டு

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

ந்தபுராணம், இராணமயணம் முதலாய் புராண இதிகாசங்களிலே புகழ்ந்துரைக்கப்படுவது ஈழம். இவ்வீழத்தே தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைவாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. அவ்வீழத்தின் வடபால் சிரசென சைவமும் தமிழும் தனிநடமாடுதற்கிடமாகியது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கடல் மருங்கில் “கண்டகி” என் முற்காலத்தே அழைக்கப்பெற்ற கீரிமலை புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பிணிகள் பல நீக்கினோர் பலர்.
அத்தீர்த்தத்து மருங்கில் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார் திருத்தம்பலேசுவரி சமேத திருத்தம்பலேஸ்வரப்பெருமான்.இவ்வாலயம்

அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்

வ்வீழ நாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபால் அளவெட்டி என்னும் அரிய புகழ் படைத்த ஊர் அமைந்துள்ளது. நகுலேஸ்வரத்திற்கு நேர்தெற்கே இரண்டு கல் தொலைவில், தெல்லிப்பளை பண்டைத்தரிப்பு வீதியில் அளவையூரின் அமைதிமிகு சூழலில், ஓமெனும் மந்திரத்துட் பொருளாயிருக்கும் உலகத்து நாயகி அன்னை முத்துமாரி கோயில் கொண்டு அருள்பாலிக்கும் தவளக்கிரி திருத்தலம் அமைந்திருக்கின்றது. இத்திருத்தலத்தின் வரலாற்றைச் சரிவரச் சொல்லக்கூடிய சரித்திர புராணச் சான்றுகளோ சாசன ஏடுகளோ எவையுமில்லை. கர்ண பரம்பரைக் கதைகளே ஓரளவுக்கு கைகொடுக்கின்றன. கோவிலின் பழமையை அன்னையின் திருவுருவ அமைப்பும், முன்பிருந்த தூண்களும், கட்டடமமைக்கப்

ஆத்தியடி பிள்ளையார் கோயில்

சிவபூமியாம் ஈழத்திருநாட்டின் தலையென விளங்கும் யாழ்ப்பாணத்தில் மர நிழல்களிலும் குளத்தடிகளிலும் சந்திகள் தோறும் விநாயகர் ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றில் பல ஆலயங்களின் வரலாறுகள் இப்போது சரியாக புலப்படாவிடினும் அவை தொன்மை வாயந்தவை.
பருத்தித்துறையின் புலோலி மேற்கிலே கட்டாடிச்சீமா என்றழைக்கப்படுகின்ற இடத்தே விநாயகர் ஆலயம் இருந்தாய் கூறுவர். இது போர்த்துக்கேயர் காலத்தே அழிவுற்றிருத்தல் வேண்டும் எனவும் கருதுவர். இருப்பினும், கட்டாடிச்சீமாவில் இலைமறை காயாய் விநாயகர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ஏறத்தாள 1860ம் ஆண்டளவில் கட்டாடிச்சீமாவிலிருந்த விநாயகர் விக்கிரகம்

ariyalai vinayakar

ஞாயிறு, 10 ஜூன், 2012

நீர்வேலிஅரசகேசரிப்பிள்ளையார்



ஊரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா

வரலாறு மிக முக்கியம்


பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.பாண்டிய நாடு

இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ்

வெள்ளி, 8 ஜூன், 2012

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்








Sithankeni Srimahakanapathi Pillaiyar Kodiyettam

வேலணை மஹாகணபதி பிள்ளையார் ஆலயம்


புளியங்கூடல் மகாமாரி அம்பாள் கோவில்

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் கோவில்


இணுவில் கந்தசுவாமி ஆலயம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் விளங்கும் இணுவில் கிராமம் சைவப் பண்பாட்டிற்கும் தமிழ், இயல், இசை, நாடகத் துறைக்கும் பெயர்பெற்ற கிராமமாக இன்றும் திகழ்கின்றது. இதற்கான காரணம் இக்கிராமத்தின்தொன்மையே ஆகும். அன்று இணையிலி என அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பின் பெயர் மருவி இணுவில் என வந்ததாக ஆய்வாளர் கூறுவர். இக் கிராமத்தின் சைவப் பண்பாட்டிற்கு, இவ்வூரில் காணப்படும் வரலாற்றுப்

கோண்டாவில் வல்லீபுரநாதர் ஆலயம்


இந்து மதத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணவ வழிபாட்டுக்கென யாழ்ப்பாணக்குடாநாடெங்கும் விஷ்ணு ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்து கோண்டாவில் கிழக்கில் அமைந்திருக்கும் வல்லீபுரநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார். ஏறத்தாள முந்நூறு ஆண்டுகளின் முன்னர் ஒரு மடாலயமாக இவ்வாலயம்

மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்

வரலாறு
மேற்கு பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்        யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்திசையிலே உள்ள தீவுக் கூட்டங்களுள் லைடன் தழவ முதன்மையானது.இங்கு உலகப்புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகம்களில் ஒன்றான ஊர்காவற்றுறை உண்டு இந்தத் தீவுகளுக்கெல்லாம் ஆட்சி புரியும் மணியகாரன் பதவிவகித்தோர் நிலைகொண்டிருந்த இடம் வேலணை என்பதால் தீவுகளுக்கு வேலணை ஒரு தலைநகர் போல விளங்குகிறது.

வேலணை கிழக்கு,மேற்கு என இரு பிரிவுகளை உடையது வேலனை மேற்கில் கோவில் கொண்டு எழுந்தருளி அடியவர்களுக்கு எளியவராகி

பெருங்காடு சிவன் கோயில்

மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.
யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்

காரைநகரின் மேற்கு வீதியிலே வாரிவளவு எனும் கிராமத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கின்றார் கற்பக விநாயகர். 1880ம் ஆண்டினிலே சுப்புடையார் பரம்பரையினரால் மண்கோயிலாய் அமைக்கப்பெற்று அவ்வூர் மக்களால் வழிபடப்பெற்று வந்தது இவ்வாலயம்.

அறங்காவலர்

சுப்புடையார் பரம்பரையினரின் வழித்தோன்றல்களாகிய இராமநாதர் மற்றும்

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்

ந்தபுராணம், இராணமயணம் முதலாய் புராண இதிகாசங்களிலே புகழ்ந்துரைக்கப்படுவது ஈழம். இவ்வீழத்தே தேவாரப் பதிகம் பெற்ற திருகோணமலை, திருக்கேதீச்சரம் திருப்புகழ் பாடப்பெற்ற கதிரமலை ஆகிய தொன்மைவாய்ந்த திருத்தலங்கள் உள்ளன. அவ்வீழத்தின் வடபால் சிரசென சைவமும் தமிழும் தனிநடமாடுதற்கிடமாகியது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கடல் மருங்கில் “கண்டகி” என் முற்காலத்தே அழைக்கப்பெற்ற கீரிமலை புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடி பிணிகள் பல நீக்கினோர் பலர்.
அத்தீர்த்தத்து மருங்கில் கோயில் கொண்டெழுந்து அருள்பாலிக்கின்றார்

வியாழன், 7 ஜூன், 2012

காரைநகர் திக்கரை முருகன் ஆலயம்

ஈழவழ நாட்டின் வட பகுதியிலுள்ள சிவபூமியாகிய காரைநகரிலே பல சைவ ஆலயங்கள் சிறப்புற்று அமைந்திருக்கின்றன. அவற்றுள்ளே களபூமியிலுள்ள திக்கரை என்னும் பகுதியில் வேண்டுவார்க்கு வேண்டுவதையெல்லாம் ஈந்தருளும் கலியுக வரதனாகிய முருகப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். பெருமை வாய்ந்த இத்திருத்தலத்தின் வரலாறு அற்புதமானது.

மருதநிலத்தின் மத்தியில் மேட்டுநிலத்திலே பலநூற்றண்டுகளுக்கு முன்னர்

சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள சித்தர்கள் வாழ்ந்த நகராம் சித்தன்கேணியிலே, யாழ்ப்பாணம் – சங்கானை – பொன்னாலை பிரதான வீதியும் கீரிமலை – பண்டத்தரிப்பு – அராலி பிரதான வீதியும் சந்திக்கும் நாற்சந்தியிலே பெரியவளவு என்னும் பதியிலே ஶ்ரீ மஹா கணபதி பிள்ளையார் கோயில் அமைந்திருக்கின்றது.யாழ்ப்பாணத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள சித்தர்கள் வாழ்ந்த நகராம் சித்தன்கேணியிலே, யாழ்ப்பாணம் – சங்கானை – பொன்னாலை பிரதான

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்


ஈழத்திருநாட்டில் விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஜதீகவரலாறுகள் கூறப்படுகின்றது. அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி வினாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு சென்ற

ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்

யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப்பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும், வைதீகத்திருவுருவம் மிக்க இணுவையம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றான்.

எம்பெருமான் கோயில் கொண்ட வரலாற்றைக்கூறுவதில் நாம் பெருமை அடைகின்றோம். இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு நூற்றாண்டுகட்குப்

பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரர்

யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது

வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்

பாடல் பெற்ற தலங்களும் புராதன ஆலயங்களும் நிறையக் காணப்படுவதே ஈழத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுள்ளே மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிறந்த தலங்களில் ஒன்று பருத்தித்துறை வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம். இது யாழ்ப்பாணத்தின் வடகீழ் கரையிலே வல்லிபுரம் என்னும் ஊரில்

சீரணி ஶ்ரீ நாகபூசணியம்மன்

ஈழத் திருநாட்டின் சைவசமயம், தமிழ்ப்பண்பு என்னும் இவற்றின் தொன்மைக்குச் சின்னமாக விளங்குவன திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்னும் இரு சிவத்தலங்களாகும். அது போன்று தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.

தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில்

இடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோயில்

அச்சுவேலியைச் சேர்ந்த இடைக்காடு என்னும் கிராமத்தில் காக்கைவளவு என்னும் இடத்தில் கோயில் கொண்டு இருக்கிறார், எங்கள் பெரியதம்பிரான். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த கிராமம்தான் இடைக்காடு. அன்பும் பண்பும் மிக்க அடியார்கள் இருக்கும் இந்த இடத்தில் கோயில் கொண்ட எம் பெரியதம்பிரான் என்பவர், அந்தப் பரம் பொருளாகிய சிவபெருமான்தான். இக் கோயிலின் மேற்க்குப் பக்கத்திலும், கிழக்குப் பக்கத்திலும் சிறிது தூரத்தில்

நீர்வேலி கந்தசாமி கோவில்

நீர்வேலியின் தெற்குப் பகுதியில் அடியார்களின் அல்லல் அகற்றி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம் அமைந்திருகின்றது.

கடம்பவிருட்சத்தை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலய வரலாற்றைப்பற்றி ஆராயுங்கால் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நீர்வளமும், நிலவளமும் மக்கள் வளமும்

பூர்வீகத்தால் மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகமுடையவளாகக் குஷ்டரோக வாய்ப்பட்டமையால் அக்குதிரை முகமும் குஷ்டரோகமும் நீக்குவதற்குப் பற்பல சிகிச்சைகள் மேற்கொண்டும் தெய்வ வழிபாடுகள் ஆற்றியும் நோய் தீராமை கண்டு தவசிரேஷ்டர் ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையை அடைந்தாள். யாழ்ப்பாணத்தில் வட கரையிலமைந்த கீரிமலை என்னும் திவ்விய தீர்த்தத்திற் கந்தசுவாமி

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்