
நூற்றாண்டில் பொதுக்கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலம் தவறாத பூசை, வழிபாட்டு ஒழங்கு, திருப்பணி வேலைகள் அறநெறிப்பாடசாலை என ஆலயநிர்வாகம் மிகவும் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வருகின்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் புதுவருடப் பிறப்பன்று பல லட்சம் பத்தர்கள் புடைசூழ விநாயகப் பெருமானின் திருத்தேர்விழா நடைபெறும் மகிமை மிக்க மருதடியான் திருவருளைப் பெறுவதற்காக பல ஊர்மக்களும் நேர்த்திகளை நிறைவேற்ற இத்தலத்தை நோக்கி தினமும் வருவர்.
இப்புனித தலத்தின் கட்டட அமைப்பு நூற்றாண்டு கடந்த சுண்ணாம்பு கற்களாலான நிர்மாணமாக அமைந்திருந்தது ஆலய வசந்த மண்டபம் மற்றும் பரிவார ஆலயங்கள் சீரான அமைப்பில் அமைக்கப்படாது உட்பிரகாரம் மிகவும் நெருக்கமாகவும் பத்தர்களுக்கு முழுமையாக பூசை வழிபாடுகளை தரிசிப்பதற்கு முடியாத நிலையும் காணப்பட்டது இந்நிலையில் பழம்பெரும் இத்தலத்தை சிறப்பாக நெறிமுறைக்கு அமைய விசாலமாக அமைக்க வேண்டும் என்ற ஆவல் அடியார்கள் உள்ளத்தில் வியாபித்தது. ஆலய தர்மகத்தாசபை நாடறிந்த சிவாச்சாரியார் சமயப் பெரியோர்களை நாடி ஆலோசனை பெற்றனர். இந்திய சிற்பக் கலைஞர்களை அழைத்து சிவாகம நெறிமுறைக்கு அமைய கருங்கற்களாலான கருவறை அமைப்பபைக் கொண்ட அசையா நிலைக் கோவிலை உருவாக்க திட்டமிட்டனர்.
அனுபவ ஞானமுடைய அகவை எண்பது நிறைந்த கீரிமலை சிவசிறீ நகுலேஸ்வலக் குருக்கள் கோப்பாய் சிவசிறீ வ.பரமசாமிக் குருக்கள் முன்னிலையில் ஆலய புனர் நிர்மாணப் திருப்பணி அங்குரார்பணம் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ ஜெயக்குமாரக்குருக்கள் பாலஸ்தாபனக் கிரியைகளை சிறப்பாக நடாத்தி பாலாலயத்தில் விநாயகப் பெருமானையும் பரிவாரத் தெய்வங்களையும் இருத்தி திருப்பணிக் கடமைக்காக ஆலயத்தை ஒப்படைத்தார். மாமல்லபுரச் சிற்பக் கலைஞன் செ.ஞானமூர்த்தி அவர்களின் தலமையில் இரவு பகலாக பிரமாண்டமான திருப்பணி வேலைகள் நடைபெற்ற வண்ணமாகவுள்ளது. இதுவரை நடைபெற்ற திருப்பணிகள் இந்தியாவிலுள்ள சோழர்காலத்திருக்கோவில்களின் வடிவம் போல் அடியார்களின் உள்ளத்தை ஆட்கொள்வதை உணரலாம் புதிய ஆலய புனரமைப்பு மிகவும் விசாலமான அமைப்பாக காணப்படுகிறது. யாழ் குடாநாட்டில் சிற்பம் நிறைந்த பெருங்கோவில் என்ற தனித்துவத்தை மருதடியான் திருக்கோவில் பறைசாற்றும் என அனைவரும் கருதுமளவுக்கு நிர்மாண அமைப்பு எழிற்சி தருகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்