திங்கள், 18 ஜூன், 2012

ந்து மதத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணவ வழிபாட்டுக்கென யாழ்ப்பாணக்குடாநாடெங்கும் விஷ்ணு ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்து கோண்டாவில் கிழக்கில் அமைந்திருக்கும் வல்லீபுரநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார். ஏறத்தாள முந்நூறு ஆண்டுகளின் முன்னர் ஒரு மடாலயமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டதாக கூறுவர். நீண்ட காலமாக சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்த இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிடேகம் 1981ம் ஆண்டு
தை மாத்தில் இடம்பெற்றது. இதன்பின்னர் இவ்வாலயம் அமைந்த பிரதேசத்தை சேர்ந்த காணியையும் அதனைச்சுழவுள்ள காணிகளையும் அதன் உரிமையாளர்கள் இவ்வாலயத்திற்கே அன்பளித்தனர். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் ஆலயத்தை கற்கோயிலாக உருவாக்கி இரண்டாவது புனருத்தாரண மகா கும்பாபிடேகத்தை 1995ம் ஆண்டு தை மாதத்தில் நடாத்தினர். இத்திவ்விய பதியின் மூன்றாவது கும்பாபிடேகம் 2007ம் வருடம் தை மாதம் இடம்பெற்றது.

ஆலய பரிவார மூர்த்திகள்

தும்பிக்கையாழ்வார்
பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தின் ஸ்நபன மண்டபத்தின் வலப்புறமாக சிறுகோவிலில் அமைந்துள்ளார்.

அநந்த சயனமூர்த்தி
ஆலய மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய கோவிலாக திருமூடி மேற்குப் புறமாகவும், திருப்பாதங்கள் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கிய சயனகோலத்தில் திருதொப்பூழ் கொடியில் செந்தாமரையில் வேதநாயகன் வீற்றிருக்க, பூதேவி திருமூடி பக்கமாகவும், ஸ்ரீதேவியான மகாலட்சுமி திருப்பாதங்களை வருடிய வண்ணமாக அடியவர்களுக்கு அருளமுதை வழங்குகின்ற வள்ளலாக அறிதுயில் கொள்ளும் காட்சியாக விக்கிரகம் அமைந்துள்ளது.

கெருட மண்டபம்
ஸ்ரீமத் நாராயணப்பெருமானின் ஊர்தியாக சொல்லப்படுபவர் கெருடாழ்வார். கெருடப்பறவையாக இருந்தாலும், இறைவன் மீது பக்தியில் ஆழ்ந்து சேவை வழங்குவதால் கெருடாழ்வார் என போற்றப்படுகின்றார். இக்கருடாழ்வாரின் சிறு ஆலயம் பலிபீடத்திற்கு முன் கருப்பக்கிரகத்தை நோக்கிய வண்ணமாக மூலமூர்த்தியை வழிபாடு செய்யும் தோற்றமாக காணப்படுகின்றார்.

பன்னிரு ஆழ்வார் திருமண்டபம்
ஆலயத்தின் உட்பிரகாரத்தை வலம்வரும்போது தென்மேற்கு பகுதியில் பன்னிரு ஆழ்வார்களுமாய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவியாழ்வார் என்போர் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றனர்.

தசாவதார மூர்த்திகள் சபாமண்டபம்
மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கண்ணன் கல்கி ஆகிய அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில் விக்கிரகங்கள் அமையப்பெற்று சபாமண்டபத்தில் காட்சி தருகின்றன.

மகா இலட்சுமி ஆலயம்
ஆலய உட்பிரகாரத்தை வலம்வரும்போது தென்மேற்கு மூலையில் மகா இலட்சுமி அருட்பிரகாரத்துடன் பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களை வழங்குகின்ற வகையில் அஷ்ட இலட்சுமிகளின் உருவ அமைவுகள் தோற்றப்பொலிவோடு காட்சி தருவதாக அமைந்துள்ளன.

சந்தான கோபாலர் ஆலயம்
சந்தான விருத்தியை கொடுக்கும் ஒரு காருண்ய மூர்த்தியாக சந்தான கோபாலர் நாகத்தில் சிறு குழந்தையாக இங்கே காட்சி தருகின்றார்.

வேணுகோபாலர் ஆலயம்
கிருஷ்ணா அவாதாரம் எடுத்து ஜீவராசிகளுக்கெலாம் அருள்செய்த வேணுகோபாலன் பீதாம்பரம் உடுத்து புல்லாங்குழலோடு இங்கு காட்சி தருகின்றான்.

இராமர் ஆலயம்
தசாவதாரங்களிலே சிறப்பானதாய் கருதப்படம் இராமாவதார மூர்த்தியாகிய இராமர் சீதா இலட்சுமணன் சகிதமாக ஆஞ்னேய சேவையோடு இங்கிருந்து அருள்பாலிக்கின்றார்கள்.

ஆண்டாள் கோவில்
ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பூதேவியின் மூர்த்தமெனச்சொல்லப்படும் சூடிக்கொடுத்த நாச்சியாரான ஆண்டாள் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார்.

இவற்றைவிடவும் இராமானுஜர் ஆலயம், நவக்கிரகமண்டபம், ஆஞ்னேயர் ஆலயம் என்பனவும் அமைந்துள்ளன.

மகோற்சவங்கள்.

இவ்வாலயத்தின் கண்ணே நித்திய நைமித்தயபூசைகளோடு திருப்பாவை நோன்புவிழா, மாகா இலட்சுமி உற்சவம், சந்தான கோபாலர் உற்சவம், வேணுகோபாலர் உற்சவம், தசாவதார உற்சவம், இராமானுஜர் உற்சவம், சீதாராம உற்சவம், அனந்தசயன உற்சவம் மற்றும் ஆழ்வார்களுக்குரிய பூசைகளும் தவறாது ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.
மூலவரான வல்லீபுரநாதர் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் வரதராஜ மூர்த்தமாய்நின்று மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்