திங்கள், 18 ஜூன், 2012

அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்

வ்வீழ நாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபால் அளவெட்டி என்னும் அரிய புகழ் படைத்த ஊர் அமைந்துள்ளது. நகுலேஸ்வரத்திற்கு நேர்தெற்கே இரண்டு கல் தொலைவில், தெல்லிப்பளை பண்டைத்தரிப்பு வீதியில் அளவையூரின் அமைதிமிகு சூழலில், ஓமெனும் மந்திரத்துட் பொருளாயிருக்கும் உலகத்து நாயகி அன்னை முத்துமாரி கோயில் கொண்டு அருள்பாலிக்கும் தவளக்கிரி திருத்தலம் அமைந்திருக்கின்றது. இத்திருத்தலத்தின் வரலாற்றைச் சரிவரச் சொல்லக்கூடிய சரித்திர புராணச் சான்றுகளோ சாசன ஏடுகளோ எவையுமில்லை. கர்ண பரம்பரைக் கதைகளே ஓரளவுக்கு கைகொடுக்கின்றன. கோவிலின் பழமையை அன்னையின் திருவுருவ அமைப்பும், முன்பிருந்த தூண்களும், கட்டடமமைக்கப்
பயன்படுத்தப்பட்ட பொருட்களும் எடுத்துச் சொல்லுகின்றன.
நீண்டகாலமாகவே இக்கோயிலில் வேள்விக்கொடியேற்றி பலியிடும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது. நாமறிந்த வரையில், 1918ம் ஆண்டளவில் ஒரு கும்பாபிடேகம் நடைபெற்றிருக்கின்றது. இக்கும்பாபிடேகத்தை கோணேசர் கோவிலைச்சேர்ந்த சிவஸ்ரீ சரவணமுத்துக் குருக்களவர்கள் நடத்தி வைத்திருக்கின்றார்கள். 1924, 25 அளவில் பலியிடுதல் நிறுத்தப்பட்டு மகோற்சவம் செய்யத்தொடங்கியிருக்கின்றார்கள். தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரை மகோற்சவம் நடந்திருக்கின்றது. ஆயின் திரும்பவும் பலியிடுதல் வழக்கத்தை கொண்டுவர சிலர் ஈடுபட்டமையினால் பெரிய குழப்பம் ஏற்பட்டு மகோற்சவம் தடைப்படலாயிற்று. பலியிடும் முயற்சியும் பலிக்கவில்லை. 1935ம் ஆண்டு தூபியின் திருத்த வேலைகள் செய்யப்பெற்று, இரண்டாவதாக மாக கும்பாபிடேகம் நடைபெற்றது. தொடர்ந்த சில ஆண்டுகளின் பின்னர் மகோற்சவம் நடைபெறத்தொடங்கியது.
1965ம் ஆண்டு தை மாத அத்த நட்சத்திரத்திலே மூன்றாவது மகா கும்பாபிடேகம், கோவிலிலே நடைபெற்ற பல திருத்த திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து நடைபெற்றது. வீரசைவக் குருக்கள் மட்டுமன்றி பிராமணக்குருமாரும் சில சந்தர்ப்பங்களிலே மகோற்சவத்தில் பணி புரிந்திருக்கின்றார்கள்.
இக்கோவிலுக்குரிய தலவிருட்சம் சரற்கொன்றை. இது வடக்கு வெளிவீதியில் வானுற வளர்ந்து நிற்கின்றது. இக்கோவிலின் பின்புறமாக ஆதி வீரபத்திர சுவாமி ஆலயம் 1982ம் ஆண்டில் எடுக்கப்பட்டிருக்கின்றது.
முன்பு விநாயகர், காத்தவராயர், அம்பிகை மூவரும் உற்சவ காலங்களில் பவனி வரும் வழக்கம் இருந்திருக்கின்றது. இப்போது அம்பிகை மட்டுமே உற்சவ காலங்களில் வீதி வலம் வருகின்றாள், நடராஜப்பெருமானுக்கு இங்கு தனிச்சந்நிதி இருக்கின்றது. இது தெற்கு நோக்கி அமைக்கப் பெற்றிருக்கின்றது. பரிவார மூர்த்திகளான விநாயகர், முருகன், நாகேஸ்வரர், வைரவர் சந்நிதிகளும் இங்கு இருக்கின்றன.
அன்னையின் அருட்பெருக்கினை போற்றிப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்கள் நயமிக்கவை. ஆக்கியவர் யாரென்று தெரியாத தவளக்கிரி முத்துமாரியம்மன் பதிகம், வழிவழி அண்ணாவிமார் போற்றிப்பரவிய துதிப்பாடல் தொகுப்பு, வைத்தியர் அம்பலவாணர் கதிரித்தம்பியவர்கள் செய்த தவளக்கிரி முத்துமாரியம்மன் இரட்டை மணிமாலை, பன்னாலையூரைச் சேர்ந்த அறிஞர் மு. பொன்னம்பலப்பிள்ளையவர்கள் இயற்றிய முத்துமாரியம்மன் திருவூஞ்சல், கவிஞர் செ. கதிரேசர்பிள்ளையவர்களின் திருப்பள்ளியெழுச்சி, தளக்கிரி முத்துமாரியம்மன் அந்தாதி என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.
வெண்மையான சிகரங்களை கொண்டிருப்பதனால் இமயமலைக்குத் தவளக்கிரியென்றும் பெயர் உண்டு. இமயத்தின் செல்வி பார்வதி. பார்வதிதேவியின் ஒரு அம்சமான அன்னை முத்துமாரி எங்கள் தவளக்கிரியிலிருந்து அருளாட்சி செய்து வருகின்றாள். தவளக்கிரிவளர் தாயை பணிந்து சஞ்சலம் தீர்ந்திடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்