சனி, 13 ஏப்ரல், 2013

சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்
************************www.fb.com/thirumarai
***வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். 
***வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். தைரியம் உண்டாகும். 
***ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். 
***சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் பெறுவர்.
***அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும்.


சிவபிரானின் பிட்சாடனர் கோலம் :
*******************************
தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.

தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.
முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும்,
பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை
மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம்
முன் இடக்கரத்தில் கபாலம்

தலை ஜடாமண்டலத்துடனும்
வலது காலில் வீரக் கழலும் உள்ளன.

பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது.
உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி;
திரிசூலம் - அழித்தல்,
மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்;
அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்;
கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.

மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும்,
பாதச் சிலம்பு ஆகமங்களாகவும்,
பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.

இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார்.
பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.

பொருளை பிட்சை இடுவது புண்ணியம்.

சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார்.

காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர், திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.

திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார்.

இவ்வடிவினைக் கண்ட திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்

“முறித்த தொரு தோல் உடுத்து முண்டஞ் சாத்தி
முனி கணங்கள் புடைசூழ முற்றந் தோறும்
தெறித்த தொரு வீணையராய்ச் செல்வார்’

சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.


பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)

நடராஜர் - சிதம்பரம்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
சோமாஸ்கந்தர் - திருவாரூர்
கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி


ரிஷபாரூடர் - வேதாரண்யம்
சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
காமசம்ஹாரர் - குறுக்கை
காலசம்ஹாரர் - திருக்கடையூர், நாகை
சலந்தராகரர் - திருவிற்குடி
திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் - திருப்பறியலூர் - நாகை
கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர்)
கங்காளர் - திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி - மதுரை
லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
சுகாசனர் - காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்