*1. ஈஸ்வரனின் அம்சமான தட்சிணாமூர்த்தி
*2. கல்விக்கும் கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி*** www.fb.com/thirumarai
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவள செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போன்ற கையும் - துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி
***கம்பர்; சரஸ்வதி அந்தாதி.
__________________________
ஆயகலைகள்; ஆராய்ந்த கலைகள்
ஏய உணர்விக்கும்;விரித்து உணரச் செய்யும்
என் அம்மை;என் தாய்
உருப்பளிங்கு;உருண்டை பளிங்கு கல் போல்
போல்வாள்;இருப்பாள்
இருப்பளிங்கு வாரா திடர்; மனத்துள்ளே இருக்கும் போது, ஒரு துன்பமும் எனக்கு வராது
கடி கமழ்;உயர்ந்த மனம் வீசும்
துடி இடையும்;சிறிய இடையும்
அனவரதமும்;எல்லா நேரமும்
**************************
- சரஸ்வதி துதி
பத்மோபவிஷ்டாம் குண்டலினீம்
சுக்லவர்ணாம் மனோரமாம்
ஆதித்யமண்டலே லீனாம்
ப்ரணமாமி ஹரிப்ரியாம்
__________________________
பொதுப் பொருள்:
வெண் தாமரை மீது அமர்ந்திருப்பவளும் குண்டலினீ என்ற சக்தியை உடையவளும் வெண்மை நிறமாக இருப்பவளுமான சரஸ்வதி தேவியே நமஸ்காரம்.
மனதிற்கு மகிழ்ச்சியைத் தருபவளே,
சூரிய மண்டலத்தில் மறைந்திருப்பவளே,
ஹரிக்கும் ப்ரியமாக விளங்குபவளே,
சரஸ்வதி தேவியே நமஸ்காரம்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்