செவ்வாய், 3 ஜூலை, 2012

ஆலய வழிபாட்டில் அனலைதீவு



ஆலய வழிபாட்டில் அனலைதீவு
ஆலய வழிபாட்டில் அனலைதீவுசைவமும் தமிழும் ஒருங்கே பேணப்படும் இத்தீவில் ஆலயங்களும் அது சார்ந்து இடம் பெறும் ஆகம வழிபாடுகளும் பிரசித்தமானவை. அவ்வாறே ஆறுமுக நாவலரால் நெறிப்படுத்தப்பட்ட அவரது மாணாக்கரான ஸ்ரீமத் சின்னப்பா உபாத்தியார் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட சதாசிவ சைவத்தமிழ் பாடசாலை இன்று 125 ஆண்டுகளை கடந்து வித்யா தானம் செய்துவருகின்றது. மேலும் இரு ஆரம்ப பாடசாலைகளும் 4 முன்பள்ளிகளும் இயங்குகின்றன. வெளிச்ச வீடு, பாதச்சுவடு என்பன வரலாற்று சின்னங்களாகும்.

ஆலயங்கள் வரிசையில் பிள்ளையார், ஐயனார் , முருகன் , சிவன் , அம்மன்
,விஷ்ணு ,வைரவர் எனப்பல தெய்வ வழிபாடுகள் முதன்மை பெறுகின்றன. இவற்றுள் ஐயனார் அனலைதீவை அடையாளப்படுத்த உதவுவதுடன் புளியந்தீவில் காணப்படும் சிவனாலயம் பண்டைய நாகேஸ்வரத்தையும் நயினை நாகபூசணியை தொடர்பு படுத்தும் ஆலயமாகவும் விளங்குகின்றது.
ஊர்காவற்றுறையில் இருந்து மோட்டார் படகில் (லோஞ்சு) பயணித்து ஐயனார் இறங்கு துறையில் இறங்கினால் நம்மை வரவேற்பது கோட்டை மாதா கோவில் எனக்கூறப்படும் கௌரி அம்பாள் கோவில் ஆகும். இது நயினையைப்போல் இறங்கு துறையில் கோயில் கொண்ட கண்ணகி அம்பாள்.  காலத்தால் கௌரி அம்பாளாக மருவியது என்பர். நாகபூசணி ஆலயம் போர்த்துகீசரால் அழிக்கப்பட்டபோது இக்கோவிலும் சிதைக்கபட்டது. தவிர ஒல்லாந்தர் காலத்தில் அவ்விடத்தே வேளாங்கன்னி மாதா கோவில் கட்டப்பட்ட போதும் சைவமணித்தீவில் அதன் தேவை ஏற்படாததால் அதை அனலை மக்கள் நிராகரித்து மீண்டும் அம்பாளை ஆவாகனம் செய்தனர்.

ஊரின் முதல் நாற்சந்தியை அடைந்தவுடன் காணப்படுவது பெரிய புலம் சங்கரநாதர் மகா கணபதிப்பிள்ளையார் கோவிலாகும். முதன்மை கடவுளரின் தேவை கருதி உருவாக்கபட்ட இவ்வாலயதிற்கே பொங்கல் , திருவிழா என்பன முதன்முதலாக நடத்தப்படும், சித்திரை வருடபிறப்பை தேர்த்திருவிழாவாக கொண்டு பத்து நாள் மகோற்சவம் இடம்பெறும். பெருங்கதை படிப்பு, தைப்பூஷம், ஆவணி சதுர்த்தி, மாத சதுர்த்தி என்பன இங்கு விசேடமாக இடம் பெறும்.
துறைமுகவீதியால் நேரே சென்றால் நாம் தரிசிப்பது வரலாற்று சிறப்பு மிக்க ஐயனார் ஆலயம் ஆகும். இது இலங்கையில் மிகப்பெரிய ஐயனார் ஆலயமாகவும், மிகப்பெரிய சித்திர தேரை கொண்டதாகவும்  விளங்குகின்றது. 13 அல்லது 16 ஆம் நூற்றாண்டுக்குரியதாக கூறப்படும் இவ்வாலயம் அனலை மக்களால் மட்டுமன்றி  தீவக, யாழ், வன்னி மக்களாலும் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார். உலகம் பூராகவும் பரவிக்காணப்படும் ஐயப்பனின் மூல கடவுளரான இவர் யானை வாகனத்தில் பூரணை புஷ்கலை சமேத ஹரிஹர புத்திர ஐயனாராக காட்சி கொடுப்பார்.
இந்தியாவின் சிவகங்கை மாவட்டம் கல்லல் துடல் எனும் ஊரில் இருந்து இறைவனின் விதிப்படி கடலில் பெட்டகம் ஒன்றினுள் பாதுகாப்பாக வைக்கபட்ட ஐயனாரின் சிலை விக்கிரகம் ஒரேகல்லில் உருவான சுயம்பு விக்கிரகம் ஆகும். சேதுக் கடலில் ஒதுங்கிய அதனை கூழாமரவடியில் ஸ்தாபித்து, பூஜிக்க தொடங்கிய காலம் முதல் இன்றுவரை ஐயனாரின் திருவருள் பேருண்மையானது.
1627 இல் யாழ் தீப கற்பத்தை தாக்கிய கடற்கோளின் (சுனாமி) போது ஐயனார் கடலலையை கட்டுப்படுத்தி மக்களை காத்த வரலாறு உண்டு. இதனை வரகவி முத்து குமார சுவாமி புலவர் அழகாக பாடியுள்ளார். இது தொடர்பான சித்திர வேலைப்பாடுகள் ஐயனாரின் 38 அடி உயரமான தேரிலும் செதுக்கப்பட்டுள்ளது. 1974 முதல் 1980 வரை உருவாக்கப்பட்ட இத்தேர் உலகப்புகழ் வாய்ந்தது. ஆடி அமாவாசையை அடுத்து வரும் பௌர்ணமியை தீர்த்த  திதியாக கொண்டு 10 தினங்கள் திருவிழா இடம் பெறும். ஒன்பதாம் திருவிழாவான தேர் திருவிழாவிற்கு இலங்கையின் அனைத்து பாகத்திலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் ஐயனாரின் பக்தர்கள் ஒன்று சேர்வார்கள். கற்பூரசட்டி முதல் பறவைக் காவடி வரை பல்வேறு நே த்திகள் ஐயனுக்கு அணிவகுக்கும், தங்க ஆபரண நேர்த்திகள் ஐயனை அலங்கரிக்கும் காட்சிகள் மிக பிரசித்தமானவை. இவை ஐயனாரின் பெரும்புகழை முரசு கொட்டி நிற்கின்றன.
அனலைதீவின் தெற்கே புளியந்தீவு எனும் சிறு தீவில் தென்னை, பனை, பற்றை காடுகள் நடுவே நாக பாம்புகளுடன் அருளாட்சி புரிபவர் நாகேஸ்வரர். கோவில் மட்டுமே உள்ள இத்தீவில் தேவர்கள்  முனிவர்கள் சித்தர்கள் வாசம் செய்து ஈசனை தொழுதுள்ளதாக ஐதீகம். பண்டைய நகேஸ்வரத்தின் எச்சமாக விளங்கும் இவ்வாலயம் நயினை நாக பூசணி அம்பாளுடன் தொடர்புடைய ஆலயம் ஆகும். புளியந்தீவில் நாகதம்பிரான் வழிபாடு இடபெற, அங்கிருந்து நாகம் ஒன்று தனக்கு பூஜித்த பூவை நயினை அம்பாளுக்கு சாத்தி வழிபட்டு வந்த வேளை கருடன் அப்பாம்பை இரையாக்க எண்ணிய போது அவ்வழியாகச் சென்ற வணிகன் அப்பாம்பை பாதுகாத்து அம்பாளின் அருளை பெற்றான். இது அம்மை அப்பனுக்கு இடையான முதல் தொடர்பாகும். அது இன்றும் தொடரும் அபூர்வ இறைச்சம்பவமாகும். தவிர போர்த்துகீசர் காலத்தில் நயினை பெருங்கோயில் இடிக்கப்பட்ட வேளை, அவ்வாலய மூலமூர்த்திகள் பத்திரப்படுதப்பட்டன. முறையே அம்பாள் விக்கிரகம் நயினையிலும், சிவலிங்கம் (நாகதம்பிரான் ) புளியன்தீவிலும் மறைத்து வைத்து பூஜிக்கப்பட்டன. இவ்வாறாக தெய்வீக தொடர்புடைய இறைவன் இறைவியாரின் அருளாட்சியே தீவகத்தை அலங்கரிக்கின்றன.
சக்தியானவளின் கீர்த்தி அனலையில் பல இடங்களில் ஆலயங்களை தோற்றிவித்துள்ளது. தான்தோன்றி ஆலயங்களாக எழுவடி வயல் எழுமங்கை நாச்சிமார் கோவில்  மற்றும் வடலூர் ராஜராஜேஸ்வரி(கண்ணகை ) அம்பாள் கோவில் என்பன விளங்குகின்றன. நாச்சிமார் கோவில் மனோன்மணி அம்மன் கோவிலாக மகோற்ஷவம்  இடம் பெறும் கோவில் ஆகும். இவை காலத்தால் முந்திய ஆலயங்கள் எனக்கூறப்படுகின்றது. தமிழர் கடவுளாம் முருகப்பெருமானுக்கும் இரு கோவில்கள் உண்டு. அனலை மத்தி அரசன் புலம் ஊடு முருகன் கோவில் அவ்வூர் மக்களால் முதன் முதலாக ஸ்தாபிக்கபட்ட கோவிலாகும். இங்கு நாவலரின் வழிவந்த கந்தபுராண படலம் பாடி பயன் சொல்லும் முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  இந்த நடைமுறை பின்னாளில் உருவாக்கப்பட்ட கலட்டி சங்கரநாத முருக மூர்த்தி கோவிலில் கந்த சஷ்டி காலத்தே இடம்பெறும் திருவிழாவில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மேலும் அனலைதீவில் காளி கோவில் , விஷ்ணு கோவில் , முத்துமாரி அம்மன் கோவில் , வீர பத்திரர் கோவில் என்பன குலக் கோயில்களாகவும்,  எட்டுக்கும் மேற்பட்ட காவல் தெய்வமான வைரவர்கோவில்களும்  காணபடுகின்றன. தினசரி பூஜைகள் விசேட பூஜைகள் என்பன இங்கு நேர்த்தியாக இடம் பெறுகின்றன.  இத்தீவில் அனைத்து இந்துமத கடவுளர்களுக்கும் ஆலயம் இருப்பது சிறப்பு அம்சமாகும். இதனால் தான்  இவ்வூர் சைவமணித்தீவு என போற்றப்படுகின்றது. இங்கு ஆகம விதி முறைகள் பிரளாவண்ணம் கிரியைகள் இடம் பெறுவதும், சிறப்பான ஆலய பரிபாலனம் இடம்பெறுவதாலும். கண்டிப்பான ஆச்சார சீலர்களாக மக்கள் விளங்குவதும் ஆன்மிகம் தழைத்து ஓங்கக் காரணம் ஆகும். இருந்தும் கடந்த கால போர்ச்சூழல் இவ்வூர் மக்களை கல்வி மற்றும் புலம் பெயர் காரணங்களுக்காக அவ்வூரை விட்டு விலக செய்தாலும் அவர்களின் நாவிலும் மனதிலும் ஐயனார் முதல் அனைத்து கடவுளர்களும் வாசம் செய்வதைக்காணலாம்.
கந்தசாமி குமரன் (B.A)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்