செவ்வாய், 3 ஜூலை, 2012

அனலை – புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரம்



அனலைபுளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரம்
அனலை – புளியந்தீவு ஸ்ரீ நாகேஸ்வரம்அனலைதீவின் தெற்கே அமைந்துள்ளது  சிறிய தீவான புளியந்தீவு எனும் புண்ணிய பூமி ஆகும். இங்கு அருவமே உருவான  பரம்பொருளான சிவனுக்கு உருவ மற்றும்  அருவுருவ திருமேனிகளாக வழிபாடு இடம்பெறுகின்றது.
பழம்பெரும் அட்ட  ஈஸ்வரங்களின் ஒன்றான  திரு நகேஸ்வரத்தின் எச்சமாக விளங்கும் இவ்வாலயம், நயினாதீவு ஸ்ரீ நாகபூசணியுடன் தொடர்புடைய கோவிலாகும். நாகம் பூஜித்தால் அம்பாள் நாக பூஜனி என்ற திருநாமம் விளங்க காரணமான எம்பெருமான் குடிகொண்ட இடம் புளியன்தீவாகும். இங்கு ஆதி நாகேஸ்வரம்
விளங்கியிருக்க வேண்டும் . அதுவே பின்னாளில் நாகதம்பிரான் என மருவி மீண்டும் அம்மை அப்பனின் விருப்பால் ஸ்ரீ நாகேஸ்வரம் என்ற நிலைக்கு  வளர்ந்துள்ளது. பண்டைய அட்ட ஈஸ்வரங்கள் இராவணனால் சிவபூமியான இலங்கையை காக்கும் பொருட்டு எட்டு திக்கும் கடலோரமாக கட்டபட்டது. இச் சிவத்தலங்கள் காலத்தால் மறைந்தும், மருவியும் , நிலைத்தும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. அவையாவன வடக்கே ஸ்ரீ நகுலேஸ்வரம், திரு கேதீஸ்வரம்  திரு நாகேஸ்வரம், கிழக்கே திரு கோணேஸ்வரம்  ஸ்ரீ மாமாங்கேஸ்வரம்(மட்டகளப்பு-அமிர்தகழி தற்போது பிள்ளையார் கோவில் ), தெற்கே ஸ்ரீ தொண்டீஸ்வரம்(மாத்தறை -தற்போது விஷ்ணு கோவில் ), மேற்கே ஸ்ரீ முன்னேஸ்வரம்(சிலாபம் ), திரு நந்தீஸ்வரம்(இரத்மலானை -கொழும்பு )  என்பனவாகும். இவை  காலத்திற்கு காலம்  இயற்கை அனர்த்தம், அன்னிய படையெடுப்புகள், இராணுவ நடவடிக்கைகள் என்பவற்றால் அழிவுற்றும்  சிதைவுற்றும் மருவி காணப்படுகின்றன.

ஸ்ரீ நாகேஸ்வரம் என்பது அனலை-புளியந்தீவு மற்றும் நயினாதீவு என்பவற்றுக்கு இடையில் அமைந்து இருந்துள்ளதுடன் அது கடல் கோளினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இன்றும் கடலுக்கு அடியில் புவனேஸ்வர பீடம் விளங்குவதால நம்பப்படுகின்றது.  அதன் எஞ்சிய வடிவங்களே புளியந்தீவு நாகேஸ்வரன் ஆலயமும் நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயமும் ஆகும். ஆதலால் தான் அம்மை அப்பனை இணைக்க நாகம் சிவனின் பூஜைக்குரிய பூவை அம்பாளுக்கு அர்ப்பணம் செய்து வந்தது. இந்நிலையில் இரத்தினக்கல் வணிக வியாபாரிக்கு அம்பாள் அருளியமை மூலம் அவ்வாலயம் பெரும் கோவிலானது . இதுவே  போர்த்துகேய படையெடுப்பு மூலம் சிதைக்கபட்ட  வேளை அங்குள்ள நாகதம்பிரான் விக்ரகம் பாதுகாப்பின் பொருட்டு புளியந்தீவில் மறைத்து வைக்கபட்டது.  இதனால் புளியந்தீவு சிவன் ஆலயம் நாகதம்பிரான் ஆலயம் என்று அழைக்கப்படலாற்று. எனவே புளியந்தீவில் நாகம் குடிகொண்டுள்ளமை அவை அம்பாளை தரிசிக்கின்றமை என்பன பிரசித்தமான  போதும் அப்பன் சிவனின் கீர்த்தி என்பது அறியப்படாமல் அல்லது அறிந்தும் சிவ வழிபாடு கட்டுப்பாடு உடையது என்ற பய உணர்வினால் வளர்ச்சி காணவில்லை. இதனையே நயினை கவிஞர் வரகவி முத்துகுமாரசுவாமி சித்தர் அவர்கள் “……நல்ல தென்னஞ்சோலையின் மத்தியில் மூர்த்தி  நடராஜர்  வாழுகின்றார் – கேட்ட மூடர் அறிவாரோ…..” எனற வரிகள் மூலம் எடுத்து இயம்பியுள்ளார்.

பற்றை காடுகளான இத்தீவில் நல்ல மூலிகைகள் நிறைந்து காணபடுகின்றது. இதனால் பழைய காலம்தொட்டு முனிவர்களும் சித்தர்களும் இங்கு வந்து தியானம் செய்து சிவனை வழிபட்டுள்ளனர். அதன் வரிசையிலே பதஞ்சலி வியாக்கிரம பாதர் முதல் அனலை சித்தர் கதிரவேலு சுவாமி, நயினை சித்தர் முத்துக்குமார சுவாமி ஆகியோர் ஈறாக பலர் இங்கு வந்து சிவனை வழிபட்டு சென்றதாக இதிகாச மற்றும் வரலாற்று கதைகள் கூறப்படுகின்றது. இத்தீவில் மக்கள் குடிசைகள் அமைத்து வாழ விரும்பியபோதும் நள்ளிரவில் கேட்கும் மணியோசைகள், பாம்புகளின் நடமாட்டம்  என்பன அவற்றை கைவிடச்செய்தன. இவ்வாறன நிகழ்வுகள் தேவர்களின் பூஜை என கருதும் கர்ண பரம்பரை கதைகள் இவ்வாலயம் மீதான பக்தி மேலீட்டை  காட்டு கின்றது. இவ்வாலயத்தின் சிறப்பு யாது எனில் ஞாயிறு தோறும் இடம்பெறும் நாக மற்றும் சூரிய வழிபாடுகளாகும், நாகர் மற்றும்  திராவிட வழிபாடுகளின் தொடர்ச்சியாக இவை இடம் பெற்று வருகின்றமை இவ்வாலய பழைமையை எடுத்துக்காட்டுகின்றது. எனவே அருவ வடிவான சிவன் சூரியனின் செம்மைக்கும் அதன் படைப்புக்கும்  முதல் பரம்பொருளாகவும் விளங்கி, அருவுருவ வடிவில் லிங்கமாகவும் உருவடிவில் நாகமாகவும் அரச மரமாகவும் வழிபடப்படுகிறார்.
அனலைக்குமரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்