செவ்வாய், 3 ஜூலை, 2012

100 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் கானும் காஞ்சி பெருமாள் கோவில்!

100 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் கானும் காஞ்சி பெருமாள் கோவில்!





பெரிய திருவடியாகிய கருடனை செலுத்துகிறவனாய், அழகான ரத்தினங்கள் அமைந்த, புள்ளிகளை உடைய படத்தோடு கூடிய ஆதிசேடன் மீது துயில்பவரும், மூன்று தீயால் போற்றப்படும் வேதங்களால் உறுதிப்படுத்தப்படுபவனும், பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உண்ட சிவபிரானுக்கும் தலைவனாய்
உள்ளவனும் ஆன, எங்கள் பெருமான் திருவத்தியூர் என்னும் திவ்ய தேசத்தில்(காஞ்சியில்) எழுந்தருளியுள்ளான், என்று பூதத்தாழ்வாரால் பாடப்பட்ட, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் காண உள்ளது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், முக்கியமானது வரதராஜப் பெருமாள் கோவில் என அழைக்கப்படும் தேவராஜசுவாமி கோவில். தேவராஜன், அத்திகிரி ஆழ்வார், அருளாளப் பெருமாள், தேவப் பெருமாள், பேரருளாளன் என பல்வேறு நாமங்களால் அழைக்கப்படும் வரதராஜப் பெருமாள், "ஹஸ்திகிரி சைலம் என்ற சின்ன காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ளார். திக்கஜங்கள் பெருமாளை ஆராதித்ததால், அத்திகிரி என பெயர் பெற்ற இத்தலத்தில், பிரம்மனுக்கு வரம் கெடுத்த வரதராஜர், கிரியின் அடிவாரத்தில் அழகிய சிங்கரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்வெட்டுக்கள்: மொத்தம், 28 ஏக்கரில் அமைந்துள்ள இக்கோவில், 108 வைணவத் தலங்களில் மூன்றாவதாகும். அழகிய சிற்ப வேலைப்பாடுகள், மூலிகை ஓவியங்கள், கல்வெட்டுகள் நிறைந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே, 362 கல்வெட்டுக்கள் இக்கோவிலில் தான் காணப்படுகின்றன. சேர, சோழ, விஜயநகர மன்னர்கள் பல்வேறு உபயங்களை செய்துள்ளதை இக்கல்வெட்டுக்கள் தான் இன்றைக்கும் பறை சாற்றுகின்றன.
வட இந்திய பாணி: ஜகதி என்ற உயர்ந்த அடிமட்டச் சதுக்கத்தின் மீது, மையத்தில் கோவில் எழுப்பப்படும் வட இந்திய பாணியில், முதலாம் ராஜராஜ சோழனால்(கி.பி.1018-1054) வரதராஜ பெருமாள் கோவில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. முதல் பிரகாரத்தில், மூலவர் நின்ற நிலையில், மேற்கு நோக்கி, அத்தியூர் ஆழ்வாராக காட்சி தருகிறார். மேற்கில், யோக நரசிம்மன் குடைவரை அமைப்பில் அருள் பாலிக்கிறார். இரண்டு ராஜகோபுரங்கள், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய கோபுரங்கள், ஐந்து பிரகாரங்கள் உள்ளன. மேற்கு ராஜகோபுரம் 96 அடி உயரம், 92.5 அடி அகலமும், கிழக்கு ராஜகோபுரம் 125 அடி உயரம், 99 அடி அகலமும் கொண்டது. நகர் முழுவதும் கோவிலுக்கு மேற்புறமிருப்பதால், நகரத்தை கடாசித்து எழுந்தருளியிருப்பதாக, பெரியோர் பாடியிருக்கின்றனர். எல்லா உற்சவங்களிலும் புறப்பாடு மேற்கு கோபுர வாயில் வழியாகவே நடைபெறும்.
நூறு கால் மண்டபம்: ஹொய்சாள மன்னன் வீர பல்லாளன், காளிங்கராயன், பாண்டிய மன்னரான ஐந்தாம் சடையவர்மன், சோழ மன்னர்கள்(1018-1246), சேர மன்னர்கள்(1291-1342), ஆகியோரும் பெருமாளை வணங்கி, தங்கள் எண்ணம் ஈடேறி, கோவிலில் பல திருப்பணிகளை செய்துள்ளனர். விஜயநகரப் பேரரசு காலத்தில், பல கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது, அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய நூறு கால் மண்டபம்.
கிளைவ் மகரகண்டி: இந்தியாவை பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குள் கொண்டு வர, முக்கியக் காரணமாக இருந்த, ராபர்ட் கிளைவ், ஆற்காடு நவாப்பை எதிர்ப்பதற்காக, படைகளை நடத்தி சென்றபோது, கோவில் வளாகத்தில் உள்ள தோட்டத்தில் தங்கினார். அந்தத் தோட்டம் இன்றும் துரை தோட்டம் என அழைக்கப்படுகிறது. அப்போது, கிளைவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. கோவில் பட்டர், பெருமாள் திருவடி தீர்த்தத்தை வழங்கினார். அதைப் பருகிய கிளைவிற்கு, உடனே காய்ச்சல் நின்றது. பெருமாளுக்கு நன்றி கூறிய கிளைவ், ஆற்காடு போரில் வெற்றி பெற்றால், விலையுயர்ந்த பொருளை, காணிக்கையாக வழங்குவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி பெற்ற கிளைவ், தங்கம், வைரம், கெம்புக்கல், ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட மகர கண்டிகை எனப்படும், விலை உயர்ந்த ஆரத்தை, பெருமாளுக்கு காணிக்கையாக வழங்கினான். இந்த மகர கண்டிகை, "கிளைவ் மகர கண்டிகை என அழைக்கப்படுகிறது. கருடசேவை, தேரோட்டம் போன்ற முக்கிய விழாக்களின்போது மட்டும், பெருமாளுக்கு மகர கண்டிகை அணிவிக்கப்படும்.
துராய் ஆபரணம்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த கர்னல் லயோனல் பிளேஸ், பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள், நாச்சியார் கோலத்தில் வந்த பெருமாளை கண்டு வியந்தார். உடனே பெருமாளுக்கு நெற்றிச்சுட்டி, துராய், சூரியன், சந்திரன் போன்ற ஆபரணங்களை வழங்கினார். இவை தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்டவை. பெருமாளுக்கு சவுரி முடியைக் கொண்டு அலங்காரம் செய்யும்போது, பிளேஸ் கொடுத்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது. அதேபோல் டில்லி ஆலம்கீர்பாஷா போன்ற மாற்று மதத்தினரும், பெருமாளுக்கு காணிக்கை அளித்துள்ளனர்.
யாகசாலை பூஜைகள் துவக்கம்: பல்வேறு சிறப்புகளைப் பெற்ற, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், ஒட்டுமொத்தமாக அனைத்து சன்னதிகளுக்கும், எப்போது கும்பாபிஷேகம் நடந்தது, என்ற விபரம் தெரியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு மேலிருக்கும், எனக் கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். அவ்வப்போது சிறிய சன்னதிகளுக்கு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, கோவிலில் ஒட்டுமொத்த கோபுரங்களை புதுப்பிக்க முடிவு செய்து, திருப்பணி துவக்கப்பட்டது. திருப்பணி முடிந்து, நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. கும்பாபிஷேக நாளான 5ம் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை யாக சாலை பூஜைகள் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்