செவ்வாய், 19 மார்ச், 2013

அரோகரா கோஷம் முழங்க மருதமலை கும்பாபிஷேகம் கோலாகலம்!


அரோகரா கோஷம் முழங்க மருதமலை கும்பாபிஷேகம் கோலாகலம்!
மார்ச் 19,2013

Temple images
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்:கோவை மருதமலை சுப்ரமணியசாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடந்தது. முருகனின் ஏழாம்படை வீடாக, பக்தர்களால் போற்றப்படுவது, கோவை, மருதமலை சுப்ரமணியசாமி கோவில். இங்கு, பெரும் பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், கடந்த 14ம் தேதி, காலை 7.30 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மறுநாள்(15ம்தேதி), காலை 7.00 மணிக்கு நவகிரக ஹோமம், மூர்த்தி ஹோமம்,சாந்திஹோமம் மற்றும் தீர்த்தசங்கரகணம் ஆகியவை நடந்தன. அன்று மாலை, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், அலங்காரம் செய்விக்கப்பட்டு, மூலாலயத்திலிருந்து கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. மாலை 5.00 மணிக்கு, முதல்கால யாக பூஜை நடந்தது. 16ம் தேதி காலை 8.00 மணிக்கு, இரண்டாம் கால யாகவேள்வியும், மாலை மூன்றாம் காலவேள்வியும் நடந்தன.
நேற்று முன்தினம் 8.00 மணிக்கு, நான்காம் கால வேள்விகளும், மாலை ஐந்தாம் கால வேள்விகளும் நடத்தப்பட்டன. அன்று இரவு 10.00 மணிக்கு, மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சொர்ணபந்தம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, நேற்று காலை 4.00 மணிக்கு, 6ம் கால யாக வேள்விகளும், நாடிசந்தானம், தர்ஸஆகுதி, மகா பூர்ணாகுதியும் நடந்தது. தொடர்ந்து, காலை 5.00 மணிக்குமேல், தான்தோன்றி விநாயகர், இடும்பன், மயில்வாகனங்கள், சித்தர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 6.30 மணிக்கு, நாடி சந்தானமும், 7.00 மணிக்கு மகாபூர்ணாகுதியும் நடத்தப்பட்டு, கலசங்கள் யாகாலயத்திலிருந்து மூலாலயத்துக்கு பிரவேசம் செய்யப்பட்டன. சிவாகம முறைப்படி, காலை 9.35 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. அப்போது கோபுரத்தின் கீழேயும், கோவிலைச்சுற்றியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று, "மருதமலை முருகனுக்கு அரோகரா என்று கோஷம் முழங்க, பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். தொடர்ந்து, 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் முடிந்தவுடன், மூலவருக்கு ராஜஅலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, சாரை, சாரையாக மலையேறிய பக்தர்கள், முதலில் ராஜகோபுரத்தை தரிசித்து விட்டு, ஆதிமூலஸ்தானம், முருகன் சன்னதிக்கு சென்று சுப்ரமணியரை தரிசித்தனர். கும்பாபிஷேக விழாவில், பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்