கம்போடியாவில் 500 ஏக்கரில் உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில்
Posted on 24/10/2012
கம்போடியாவில் 500 ஏக்கரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய இந்துக்கோயிலானது, உலகிலுள்ள எல்லா அதிசயங்களையும் வெல்லவல்ல தமிழர் அதிசயமாக காட்சிதருகின்றது. கம்போடியா நகரில் 1200க்கு மேற்பட்ட கோவில்கள் இந்து சமயக் கலாசாரத்தின் வெளிப்பாடாக ஓங்கி நிற்கின்றன. கலை, கலாச்சாரம், வியக்கத்தகு தொழில் நுட்பம், தொன்மை, பிரமிக்கத்தக்க அமைப்பு இவையாவும் பார்ப்போர் மனதில் ஓர் உலக அதிசயமாக காட்சி தருகின்றது.
அங்கூர், என்பது கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதிக்கு உரிய இடமாலும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல். ஐந்நூறு ஏக்கர் சுற்றளவு நிலப்பரப்பில் 3 ஆயிரம் கோடி தொன் கருங்கல்லால், 10 இலட்சம் பணியாளர்களால் 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட திருக்கோவில் உலகின் மிகப் பெரிய கோவிலாக விளங்குகிறது. (இவ் ஆலையம் இரண்டாம் ஜெயவர்மன் (790 – 835) முதல் ஜெயவர்மன் பரமேஸ்வரா (1327) வரை உள்ள பல மன்னர்களால் கட்டப்பட்டவை என கூறுவாருமுளர்.)
சூரியவர்மனின் ஆட்சி, சோழ அரசர்களிடம் நல்லுறவுடன் இருந்ததால். மலாயாவின் முன்னேற்றம் அதி விரைவாக வளர்ந்தது. வியாபாரம், அரசியல், மதம் என அனைத்தும் மேலோங்க ஆரம்பித்தது. அக்காலத்தில் பெரிய கோவில்களை கட்டும் அரசனே தன் நாட்டில் செல்வச் செருக்குடன், விளக்குகிறான் என்ற நம்பிக்கை இருந்தது. சோழ அரசின் கீழ் இருந்த சூரிய வர்மனும் செல்வச்செருக்குடன் ஆட்சிபுரிந்தான் என்பதயே இவ் ஆலயங்கள் நினைவுபடுத்துகின்றன.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்