வியாழன், 4 அக்டோபர், 2012

அறிந்த பெயர் அறியாத விவரம்


த்ருஷ்டத்யும்னன்
சிறுவர் பூங்கா

பாஞ்சால தேசத்தின் மன்னன் துருபதன். அவருக்கும் துரோணருக்கும் இடையில் இருந்த நட்பு மாறி, மனக்கசப்பும் பகைமையும் தோன்றின. துரோணரை எவ்வாறேனும் வெற்றி கொள்ள வேண்டுமென்று துருபதன் விரும்பினார். உபயஜா என்ற முனிவரைக் கொண்டு பெரியதொரு யாகத்தை நடத்தினார். துரோணரை முறியடிக்க ஒரு மகனும் அர்ஜுனனை மணமுடிக்க ஒரு மகளும் வேண்டும் என்பதே யாகத்தின் நோக்கமாக இருந்தது.
உபயஜா முனிவர் யாகத்தை நடத்திய போது, வேள்வித் தீயிலிருந்து வீரத்திருமகன் ஒருவன் தோன்றினான். அவன் வில்லும் அம்பும் தரித்து மாவீரனாக வெளிப்பட்டதும், துருபதன், அவனே தன்மகன் ‘எவராலும் வெல்லற்கரியவன்’ என்ற பொருள் விளங்க ‘த்ருஷ்டத்யும்னன்’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.
அதே வேள்வித் தீயில் தோன்றிய அழகிய இளம் பெண்ணுக்கு ‘கிருஷ்ணை’ என்று பெயரிட்டனர். அவளே திரௌபதி. த்ருஷ்டத்யும்னன், வீரனாகவே பிறந்த போதிலும் அக்காலத்தில் அஸ்திர வித்தையில் சிறந்து விளங்கிய துரோணரிடம் பயிற்சி பெற்றான்.
திரௌபதி மணப்பருவமடைந்தாள். அவளை அர்ஜுனனுக்கு மணமுடிக்கவே துருபதன் விரும்பினார். ஆனால் பாண்டவர்கள் வாராணாவதத்தில் அரக்கு மாளிகை தீப்பற்றியதால் இறந்து போனார்கள் என்ற செய்தி கேட்டு துக்கமடைந்தார். இறக்கவில்லை; எங்கோ இருக்கிறார்கள் என்றும் சிலர் கூறக்கேட்டு ஆறுதலடைந்தார். அர்ஜுனனால் மட்டுமே வெல்ல முடியும் என்னும் படியாக ஒரு பந்தயத்தை வைத்து திரௌபதிக்கு சுயம்வரம் நடத்தினார். சுயம்வரத்திற்கு மன்னர்கள் பலர் வந்தார்கள். ஏக சக்ர நகரத்தில் பிராமணர்களைப் போல வேஷம் தரித்து வாழ்ந்து வந்த பாண்டவர்களும் சுயம்வரம் பற்றிய செய்தியறிந்து பாஞ்சால தேசத்துக்கு வந்தார்கள். பந்தயத்தில் அர்ஜுனன் வென்றதும் திரௌபதி அவனுக்கு மாலையிட்டாள். திருஷ்டத்யும்னன், அவர்களைப் பின் தொடர்ந்து ஏகசக்ர நகருக்குச் சென்றான். பாண்டவர்கள் தங்களுக்குள் பேசியதைக் கேட்டபின்பு, திரௌபதியை வென்றது அர்ஜுனனே என்று கூறி தந்தைக்கும் மகிழ்ச்சியை அளித்தான்.
ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்த த்ருஷ்டத்யும்னன், பாண்டவர்களின் உற்ற நண்பனாக விளங்கினான். பாரதப் போரில் த்ருஷ்டத்யும்னன் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டான். பதினைந்தாவது நாள் யுத்தத்திலே, துரோணரை எதிர்த்துப் போரிட்டான். இருவருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. துரோணரை, தந்திரத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்று கிருஷ்ணர் ஒரு யுக்தி செய்தார். “அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:” அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது என்று தருமரைக் கூறவைத்ததும், துரோணர் சரியாகக் கேட்டுப்புரிந்து கொள்ளாமல் தம் மகன் அஸ்வத்தாமா தான் இறந்து விட்டான் என்று எண்ணி ஆயுதங்களைக் கீழே போட்டார். தேர்த்தட்டில் சாய்ந்தார். இதுவே தகுந்த சமயம் என்று த்ருஷ்டத்யும்னன் அவரைக் கொன்றான். தந்தை இறந்ததைக் கேள்வியுற்ற அஸ்வத்தாமா கொதித்தெழுந்தான்.
பாரதப் போர் முடிவுற்ற நாளில் இரவோடிரவாக, பாண்டவர்களின் பிள்ளைகளையும், த்ருஷ்டத்யும்னனையும், அவர்கள் தூங்கும் போது, அஸ்வத்தாமா கொன்றான். மகாவீரனாக விளங்கிய துருபதபுத்திரன், குரு துரோணரை அதர்மமாகக் கொன்றதால், அவனுக்கு இத்தகைய கொடுமையான முடிவு ஏற்பட்டது.
த்ருஷ்டத்யும்னனுக்கு த்ருஷ்டகேது, க்ஷத்ரதேவா, க்ஷத்ர வர்மா, க்ஷத்ரஞ்சயா எனப்பல புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களும் பாரதப்போரில் உயிரிழந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்