வியாழன், 4 அக்டோபர், 2012

மகளிர் பகுதி பெண் குல திலகம்


மேனை
“ஜீயார்”
இமவான், பர்வதங்களின் அரசன். பர்வதராஜனின் பத்தினி மேனை. ஔஷதிபிரஸ்தத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி செய்து வந்தான். அவர்களுடைய தவப்பயனாக உமாதேவியே மகளாகத் தோன்றினாள். பர்வதராஜனின் புத்திரியாக பார்வதியாக, சிவபெருமானைக் குறித்து தவம் செய்யலானாள். சிறுபெண்ணாக, பார்வதி தவம் செய்வது மேனையின் தாயுள்ளத்துக்குத் துன்பத்தைத் தந்தது.
மன்மத தகனம் ஆனதும் பரமேஸ்வரர், பார்வதியை மணமுடிக்க விழைந்தார். சப்த ரிஷிகளையும் அழைத்து பர்வதராஜனிடமும் மேனையிடமும் திருமணத்திற்கு சம்மதம் பெற்றுவர அனுப்பினார். சப்தரிஷிகளும் ஔஷதி பிரஸ்தம் நகரை அடைந்ததும் இமவான் மேனையுடன் அவர்களை வரவேற்றான். உபசரித்து இருக்கை தந்தான்.
“ராஜனே! பரமேஸ்வரன் உன் திருமகளை மணம் புரிந்து கொள்ள விழைகிறார். தங்கள் சம்மதம் பெறவே நாங்கள் இங்கு விந்துள்ளோம்.”
“ரிஷிகளே! நான் பாக்யம் செய்தவனாகிறேன். புண்ணிய வினைகளின் பலனாகவே நினைக்கிறேன்.” என்று இமவான் முகமலர தன் சம்மதத்தை வெளிப்படுத்தினான்.
ஆனால் மேனையின் முகமே வாடியது. இதைக் கண்டு ரிஷிபத்தினியாகிய
அருந்ததி, மேனையிடம் வினவினாள்.
“முன்பு சிவபெருமான் தக்ஷன் மகளை மணந்த பிறகு, அவளை பிறந்தகத்திற்கே அனுப்பவில்லை. ஒருமுறை அவள் மீறிச் சென்றபோது, சிவபெருமான் தக்ஷனின் தலையையே தம் வீரனைக் கொண்டு கொய்து விட்டார். அதனால் தான் தயக்கமாக இருக்கிறது.” என்றாள் மேனை. மேனையின் கலக்கத்தைப் போக்க, அருந்ததி சிவபெருமானின் குண சௌந்தர்யங்களையும் தக்ஷன் செய்த தவறுகளையும் எடுத்துக் கூறிய பிறகு மேனை சம்மதம் தெரிவித்தாள்.
சப்தரிஷிகளும் மகிழ்வோடு திரும்பிவந்து இமவானும் மேனையும் இசைவு தந்ததை பரமேஸ்வரரிடம்  கூறினார்கள்.
பர்வதராஜன் விவாகத்திற்கான ஏற்பாடுளைச் செய்யலானான். தேவதச்சனான மயன், ஔஷதி பிரஸ்த நகரை தேவலோகம் போல அலங்கரித்தான். உறவினர்களும் பல நாட்டு மன்னர்களும் வருகை தந்தவண்ணம் இருந்தார்கள். பிரம்மாதி தேவர்களும், சர்வேஸ்வரனை அலங்காரம் செய்து அழைத்து வந்தார்கள். கிரீடத்திலே பிறைச்சந்திரன் ஒளிர்ந்தான். நெற்றிக்கண், திலகமாக ஒளிர்ந்தது. இடையிலே பட்டாடை, பொன்னாபரணங்கள் திகழ காமேஸ்வரராக இளமை ததும்ப ஈசன் தோன்றினார்.
மேனைக்கு, மாப்பிள்ளையைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து, அவரைக் காண வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. நகரத்தை நோக்கி, மாப்பிள்ளை ஊர்வலமாக வருகிறார் என்பதை அறிந்ததும் அரண்மனை உப்பரிகைக்குச் சென்றுவிட்டாள். அவளுக்கு ஈசனைச் சுட்டிக் காட்ட நாரதர் நின்றிருந்தார்.
மேனை பரபரப்புடன் “இதோ! அலங்காரத் தேரில் வருகிறாரே அவரா?” என்றாள்.
“இவர் இல்லை. இவர் கீதம் பாடும் கந்தர்வர்” என்றார் நாரதர்.
சிவனுடைய சந்நிதானத்தில் கீதம் பாடுபவரே, இத்தனை அழகோடு இருக்கிறார் என்றால் சிவனும் பேரழகுடன் தான் இருப்பார் என்று மேனை எண்ணினாள்.
அடுத்ததாக குபேரன் யக்ஷர்கள் சூழ வருவதைக் கண்டு “இவர்தான் ஈசனா?” என்றாள். “இல்லை இவர் குபேரன்” என்று நாரதர் கூறினார். தொடர்ந்து வருணன், இந்திரன் என ஒவ்வொருவரையும் சுட்டிக் காட்டி மேனை கேட்க, “இல்லை” என்று கூறி, இவர்களை விட அழகும் ஒளியும் பொருந்தியவர் பரமேஸ்வரர் என்று நாரதர் விடையிறுக்க மேனை உற்சாகமடைந்தாள். மாப்பிள்ளையைக் காணும் ஆவல் கணத்துக்குக் கணம் அதிகமாயிற்று.
அப்போது ரிஷப வாகனத்தில் வந்த சிவனை நாரதர் சுட்டிக் காட்டி, “மேனை! இதோ இவர்தான் உன்மாப்பிள்ளை” என்றார். மேனை அவரைப் பார்த்தாள். ஐந்து முகங்கள் பத்து கரங்கள் ஜடை விரிந்து தொங்குகிறது யானைத் தோலை ஆடையாகவும், சர்ப்பங்களை ஆபரணங்களாகவும் அணிந்து கபாலமாலை கழுத்தில் தொங்க சூலமும் மழுவும் ஏந்தி பூதகணங்கள் ஆர்ப்பரிக்க வரும் சிவனைக் கண்டதும் மேனை அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
“ஹா! இவரா, என் செல்வ மகளை மணக்க இருப்பவர்? ஆண்டிப் பரதேசியாய் இருப்பவரையா மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தாய் என்று ஊரும் உறவும் எள்ளி நகையாடுமே!” என்று மேனை குலுங்கி அழத் தொடங்கினாள். இதைப் பார்த்து நாரதர் திடுக்குற்றார். “எதற்காக துக்கப்படுகிறாய்?” என்றார்.
“எல்லாரும் சேர்ந்து என்னையும் என் செல்வப் புதல்வியையும் ஏமாற்றி விட்டீர்களே!” என்று கதறினாள். இமவான் விரைந்தோடி வந்து மேனையை சமாதானம் செய்தார். ரிஷிகள் அவளிடம், ஞானக் கண் கொண்டு பார்த்தால் மட்டுமே ஈசனை அறிய முடியும் என்று கூறி அவளை ஈசனிடம் அழைத்துச் சென்றார்கள். மேனை, பரமேஸ்வரரை நோக்கினாள். மன்மதனை வெல்லும் அழகும் இளமையும் கொண்டு சர்வாலங்கார பூஷிதராகத் திகழ்ந்த மாப்பிள்ளையைக் கண்டு மேனையின் முகம் மலர்ந்தது. துயரம் மறைந்தது. தன்னுடைய அஞ்ஞானத்தை எண்ணி நாணமடைந்தாள்.
பார்வதிக்கு ஏற்றவர் இவரே என்று எண்ணி உள்ளம் பூரித்தாள். கணவருடன் சேர்ந்து விவாஹ மஹோத்ஸவத்தைச் சிறப்புடன் நடத்தினாள். மேனையின் வதனத்திலே சர்வலோக நாயகனை மாப்பிள்ளையாகப் பெற்ற கர்வம் தோன்றியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்