ஞாயிறு, 14 அக்டோபர், 2012

அதிசயமான சபரிமலை யாத்திரை


2009 ஆண்டு தான் என்னுடைய முதல் சபரிமலை யாத்திரை . அற்புதமான யாத்திரை வித்தியாசமான யாத்திரை . 

2009 ஆண்டு எனது நண்பர் மாறன் அவர்கள் சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருந்து போக வேண்டும் சிவா என்று கூறினார் . (சபரிமலைக்கு செல்லவேண்டும் என்றாள் 10000 ரூபாய் தேவை இன்றைய நிலையில்) நானோ சரி சிவா உங்களை யாரோடாவது அனுப்பி வைக்கிறேன் என்றேன். பிறகு எனது இன்னொரு நண்பர் ஜெயசந்திரன் என்பவர் வீட்டில் கோவில் கட்டவேண்டும் வேலைக்கு ஆள்வேண்டும் என்றார் . நானோ மாறன் சிவாவை வர சொல்கிறேன் என்றேன் . மாறன் அவர்களிடம் கூறினேன் . அவரும் வேலைக்கு வந்தார் . சுமார் 20 நாட்கள் வேலை நடந்தது. ஒருநாள் ஜெயசந்திரன் அவர்கள் வீட்டிற்க்கு சென்று இருந்தேன் . அப்போது எத்ர்ச்சையாக அவரிடம்  மாறன் சிவா சபரிமலைக்கு மாலை போட்டு போக வேண்டும் என்று கூறுகிறார்கள்  என்ன செய்வது என்றேன். அவர் சிவா எங்களோடு வரசொல்லுங்கள் அவரின் முழு செலவும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் . எனக்கோ மகிழ்ச்சி . மாலை போடும் நாள் 

வந்தது அவரே மாறன் சிவாவுக்கு வேஷ்டி துளசிமாலை எல்லாம் வாங்கி கொடுத்து சிவன் கோவிலில் வைத்து மாறன் சிவா மாலை போட்டுக்கொண்டார் . அதில் இருந்து 60 நாள் விரதம் . விரதம் முடியும் நாள் வந்தது. மாறன் அவர்கள் கண்ணிசாமி என்பதால் கன்னிபுஜை வைக்க வேண்டும் . ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை அதனால் கட்டு கட்டும் போது 5 பேருக்கு அன்னதானம் வைத்து விடுங்கள் என்று ஜெயச்சந்திரன் அவர்கள் கூறினார்கள்

அதுபோல கட்டு கட்டும் நாளில் அன்னதானம் வைத்து பூஜைகள் நடந்தது கட்டுக்கட்டினார்கள் யாத்திரைக்கு புறப்பட்டார்கள்  
(தூத்துக்குடி யில் இருந்து சபரிமலைக்கு பாதையாத்திரை சுமார் 300to350km 12 நாள் யாத்திரை ) மாறன் அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு வீட்டிற்க்கு வந்தேன் . 

வந்து அன்று இரவு தூங்கும் போது கனவு மாறன் அவர்கள் ரோட்டில் ஓடி சென்று கடலில் விழுவது போல . எனக்கு காலையில் மனமோ ஏதோ நடக்க போகிறது என்று தெரிகிறது . 5 மணி வரை யோசித்தேன்  6 மணிக்கு என் அம்மாவிடம் சென்னை போகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினேன் . ஜெயசந்திரன் அவர்களுக்கு போன் செய்தேன் சிவா எங்கு போகிறீர்கள் என்று அவர் சிவா வல்லநாடுகிட்ட போகிறோம் என்றார் . சிவா நானும் வருகிறேன் என்றேன் . அவர் வாருங்கள் என்றார் . பஸ்சில் ஏறி வல்லநாடு கிளம்பினேன் . வல்லநாட்டில் இறங்கி அவர்களோடு இணைந்து நடக்க ஆரம்பித்தேன் . நான் மட்டும் தான் கட்டு கட்டாமல் அவர்களோடு செல்கிறேன் .

புதிய அனுபவம் சிறிது மறுநாள் திருநெல்வேலி சென்ரோம். எனக்கு அங்கு வைத்து கட்டு கட்டி போக வேண்டும் என்று ஒரு ஆசை மெல்ல ஜெயசந்திரன் அவர்களிடம் கூறினேன் .அவர் சிவா குருசாமி கேட்டால் கோபப்படுவார் என்றார் . மாலை போட்டு விரதம் இருந்தால் மட்டும் தான் கட்டு கட்ட வேண்டும் சிவா என்றார் . பிறகு குருசாமிஇடம்  கூறினார். பிறகு நாளை தொடரும்      


சதுரகிரியில் அதிசயம்

கோவையில் இருந்து அடச்யபாத்திரம் என்ற வலைத்தளம் நிர்வாகி சிவா.லட்சுமி அவர்கள் சதுரகிரி வந்தனர் .அவர்களோடு நானும் எனது நண்பர் சதீஷ் ,மாறன் ஆகியோரும் சதுரகிரி வந்தோம் ஆடி அமாவாசை இரு தினங்கள் முன்னாள் மூவரும் சதுரகிரி ஏறினோம். கோரக்கர் குகையில் சுமார் 3 மணிநேரம் தங்கினோம் . பிறகு அங்கிருந்து புறப்பட்டு மேலே ஏறினோம் . இரட்டை லிங்கத்திற்க்கு முன்னாள் ஒரு இடத்தில் அமர்ந்தோம் . நாங்கள் அமர்ந்த இடத்திற்க்கு எதிரே பிரகாசமாக ஒரு ஒளி தெரிந்தது . உடனே நாங்கள் பார்த்தோம் .திடீர்யென அந்த பகுதி முழுமயாக சுமார் 15 மேற்பட்ட ஒளி தெரிந்தது திடீர் என அனைத்தும் மறைந்தது .பிறகு அனைத்தும் ஒன்றாக நகர்வதை கண்டோம் .பிறகு மறைந்தது பிறகு இரண்டு ஒளிகள் மட்டும் பிரகாசமாக தெரிந்தது(அந்த ஒளி சுமார் 2 மணிநேரம் ஒரே இடத்தில் பிரகாசமாக இருந்தது .நடந்து செல்லும் பாதைக்கு எதிர் மலை) .அதைத்தான் கைபேசியில் zoom செய்து புகைப்படம் எடுத்தேன் .சுமார் 4 மணிநேரம் அங்கேயே அமர்ந்து ஜோதி தரிசனம் பார்த்து மகிழ்ந்தோம் . பிறகு மேலே செல்லாமல் கிலே இறங்கினோம் .சித்தார்களை பார்த்த சந்தோசத்தில் .இதில் என்ன ஆச்சர்யம் என்றாள் பலர் அந்த பகுதியை கடந்தனர் . பலர் அங்கு அமர்ந்தனர் ஆனால் ஒருவருக்கும் இந்த ஒளி தெரியவில்லை .


சதுரகிரியில் அதிசயம்


நானும் எனது நண்பரும் பைபிள் வசனமும்

2006 ஆண்டு ஒரு ஞாயிற்று கிழமை அன்று நான் எனது தொழில் பார்ட்னர் டார்வின் வீட்டிற்க்கு சென்று இருந்தேன் .(வழக்கமாக ஞாயிறு அன்று இருவரும் மாறி மாறி இருவர் வீட்டிர்க்கும் செல்வது வழக்கம்) டார்வினின் வீட்டில் உள்ளவர்கள் பக்கா கிறிஸ்தவ csi சேர்ந்தவர்கள் . நான் எப்போது அவர்கள் வீட்டுக்கு போனாலும் நீ இந்து தெய்வங்களை கும்பிடுவது தவறு .அப்படி என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் .
அன்றும் அவர்கள் அம்மா ,அப்பா,அக்கா வழக்கம்போல இந்து மத தெய்வங்களை கும்பிடுவது மிகவும் பாவம் ,இதை நீ தொடர்ந்து கும்பிட்டால் கண்டிப்பாக உனக்கு நரகம் தான் அதனால் மீண்டும் யேசுவின் பிள்ளையாக மனம் திரும்பிவிடு என்று அவர்கள் கூற நானும் சிவபெருமனை பற்றியும் , சித்தர்களை பற்றியும் அவர்களிடம் கூறினேன் ,அவர்களோ நான் சொல்வதை கண்டுகொள்ளவே இல்லை . நாங்கள் சொல்வதை நீ கேள் ,சாத்தானை பற்றி எங்களிடம் பேசாதே என்று கூற எனக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது.எனக்கு கோபம் வந்து அவர்களிடம் சரி நீங்கள் வணங்கும் ஏசுவே உண்மை என்று வைத்து கொள்வோம் ,பைபிள் தான் உண்மையான வேதம் என்றும் வைத்து கொள்வோம் . பைபிளை என்னிடம் தாருங்கள் நான் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தை எடுக்கிறேன் . அதில் நான் போகும் பாதை தவறு ,இல்லை என்னை கடிந்து கொள்வது போல ஏதாவது வசனங்கள் வந்தால் உடனே நான் இந்து தெய்வங்களை வணங்குவதை விட்டுவிடுகிறேன் ,  அப்படி வசனம் வரவில்லை என்றாள் நீங்கள் என்னிடம் விவாதம் செய்வதயும், இந்து தெய்வங்களை பேய் என்று கூறுவதையும் விட்டு விட வேண்டும் என்று கூறினேன் அவர்களும் சரி என்றார்கள் . பைபிளை வாங்கினேன் சித்தர்களையும் , குருவான அத்திரி மஹரிசியயும் நினைத்து கொண்டு கண்ணை மூடி ஒரு பக்கத்தை எடுத்தேன் .(அந்த வசனத்தை கண்டவுடன் அடக்கமுடியாத மகிழ்ச்சி)
அதில் வந்த வசனம் மகனே நீ செல்லும் பாதை சரியான பாதை அதில் உள்ள முட்களையும் ,கற்க்களையும் சீர்படுத்தி உன்னை அழைத்து செல்வேன் என்று வந்தது . (அந்த வசனத்தின் குறிப்பு சரியா ஞாபகம் இல்லை) மனதிற்க்கு மகிழ்ச்சியும் சித்தர்களின் மேல் உள்ள பக்தியும் அதிகமானது .
நான் பார்த்தவை பைபிள் வசனமாக ஏற்று கொள்ளவில்லை ,என்னுடைய குருநாதர் அத்திரி மகரிஷியின் போதனையாக எடுத்துகொண்டேன். அன்றில் இருந்து இன்றுவரை அவர்கள் என்னிடம் இந்து மத தெய்வங்களை பற்றி பேசவே இல்லை . இது எல்லாம் குருநாதர் மகிமை.

அந்த பெண் ஆத்மாவை விரட்டியதும் ,கண்ணெதிரே நடந்த அதிசயமும்

பிறகு அவர் ஆஞ்சநேயர் மந்திரங்கள் சொல்ல அந்த ஆத்மா அலற ஆரம்பித்தது .பிறகு எங்கள் ஊரில் மொட்டை கோபுரம் என்ற இடம் கடற்கரை அருகில் உள்ளது . அங்கு அழைத்து வர சொன்னார் . நாங்களும்  ஆட்டோவில் அவளை அழைத்து கொண்டு சென்றோம் .அவர் சேவல் அரிவாள் ,எலுமிச்சைபழம்,முட்டை,தேங்காய், போன்றவைகளை எடுத்து கொண்டு அவரும் பின்னால் வந்தார் . 

அங்கே வந்தவுடன் அவளின் கூட வந்தவர்களை அனைவரையும் விலகி போக சொன்னார் . பிறகு என்னையும் ,எனது நண்பர் சிவா அவரையும் கூப்பிட்டு நீங்கள் இருவரும் பக்கத்தில் இருங்கள் என்றார் . சிறிது நேரத்தில் அவர் ஆஞ்சநேயர் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே முட்டை சுற்றினார் ,  பின்பு எலுமிச்சை கனியை சுற்றினார் , இறுதியாக சேவலை அவள் மேல் சுற்றினார் . அந்த சேவலை அவள் தலைமேல் வைத்து வெட்ட தயாரானர் .அங்கு தான் அந்த ஆச்சர்யம் நடந்தது . அவர் அந்த சேவலை அவள் தலைமேல் வைத்து வெட்டினார் .அந்த ஆத்மா பயங்கர குரலில் நா போறேன் என்ன விட்டுவிடு என்று சொல்லியது . 

இந்த நிகல்வு நடக்கும் போதே அந்த சாமியார் எதும் செய்யவில்லை,ஆனால் அவரது பல் தனியாக கலந்து கீழே விழுவதை கண்டோம் . பிறகு அவளும் மயங்கி விழுந்தால் அவளை அழைத்து கடலில் குளிக்க சொன்னார் . நாங்கள் அந்த சாமியாரிடம் சென்று பல் கிழே விழுந்ததே ஏன் என்று கேட்டோம் .அவர் வாயை காட்டினார் அவர் பல்லை ஒருவர் உடைத்தது போல ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது .அவர் எனது கால்ளை பாருங்கள் என்று காட்டினார் .சுமார் இரண்டு கால்களிலும் ஐம்பது வெட்டுக்கள் இருக்கும் .அதில் ஒரு வெட்டு மட்டும் இப்போது வெட்டியது போல இருந்தது . இது என்ன என்று கேட்டோம் . அவர் அந்த ஆத்மாவை நான் விரட்டியதால் போகும் போது கோபத்தில் அது செய்த வேலை என்றார் . 

(நாங்கள் பார்த்து கொண்டே தான் இருந்தோம் .அவர் எதுமே செய்யவில்லை ) சரி எங்களை மட்டும் ஏன் இருக்க சொன்னீர்கள் அவர்கள் வீட்டில் உள்ளவர்களை ஏன் ஒதுங்கி நிக்க சொன்னீர்கள் என்று கேட்டோம் .


(அந்த நேரத்தில் இந்து மதத்தயோ ,இந்து மத கடவுள்களை பற்றியோ ஒன்றும் தெரியாது .இந்து மத தெய்வங்களை பேய் என்று சொல்லிக்கொண்டு இருந்த காலம் அவர் சொன்னது கேட்டு குழப்பம் மற்றும் கோபம் வந்தது)நாங்கள் கேட்டதற்க்கு அவர் சிவன் அருள் இருப்பவர்களை எந்த துஷ்ட சக்தியும் எதும் செய்யாது என்றார் . எங்களுக்கு புரியவில்லை . அவர் இந்த ஆத்மாவை விரட்ட வாங்கிய பணம் ரூபாய் 100 மட்டும் . இந்த நிகல்வுகள் மிகவும் அதிசயமாக இருந்தது . மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .

ஹனுமனின் அருள்

பிறகு எந்த முஸ்லிம் மசூதிக்கும் அங்குள்ள பெரியவாக்கும் கட்டுபடவில்லை அந்த ஆத்மா. பிறகு யாரோ முஸ்லிம் பெரியவா கூறினாராம் . முருகன் திரையரங்கம் பக்கத்துல ஒரு அனுமன் கோவில் உள்ளது .அங்கு சென்று பாருங்கள் என்றாராம் . அவர்களும் சரி என்று சொல்லிக்கொண்டு அங்கு சென்றார்கள் . 

நாங்கள் மூன்று பேர் சென்று இருந்தோம் .அங்கு கோவிலுக்குள் சென்றவுடன் அந்த ஆத்மா மிகவும் பயங்கரமாக கத்தியது. பூசாரி வந்தார் .அந்த அக்காவின் முன்னாள் அமர்ந்தார் . 

அவளிடம் நீ யார் என்று கேட்டார் .அவளோ பேசவில்லை .பல முறை கேட்டார் பதிலே இல்லை . அவர் அவளின் தலை முடியின் ஒரு சில முடியை பிடித்து கொண்டு சொல் என்றார் .உடனே அந்த ஆத்மா சொல்கிறேன் என்று சொல்லி அலறியது .  

அந்த ஆத்மா கூறியது எனக்கு வயது 18 நான் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் பள்ளியில் படித்தேன் . அங்கு நாங்கள் உடை மாற்றுவதை வீடியோவில் நிர்வாகிகள் பார்த்தார்கள் .அதை நான் கண்டு பிடித்தேன் .உடனே என்னை கொலை செய்து விட்டார்கள். போலீசார் அவர்களை கைது செய்தனர் .அந்த செவிலியர் பயிற்ச்சி பள்ளிக்கும் சீல் வைத்தனர் . நானோ போக வழியில்லாமல் அங்கு சுற்றி திரிந்தேன் . 

சில வருடங்கள் கழித்து அந்த இடத்தை ஒரு கேட்ரிங் பயிற்சி  சொல்லிக்கொடுக்கும் நிறுவனம் வாங்கியது .அங்கு இவளின் தம்பி சேர்ந்தான் . அவனை பார்க்க இவள் அங்கு வந்தால் நல்ல பூ செண்டு போட்டுட்டு வாசமா வந்தா நா அங்கவுள்ள வேப்ப மரத்தில இருந்தேன் . இவள ரொம்ப பிடிச்சது . உடனே இவல்ட்ட வந்துட்டேன் .நா எந்த தப்புமே செயல நா இன்னும் கொஞ்ச காலம் இவள்ட இருந்துகிறேன் .என்று அந்த ஆத்மா உருக்கமாக பேசியது .கண்ணீர் வரவைத்தது . மீண்டும் நாளை அந்த ஆத்மா அவளை விட்டு விரட்டிய நிகழ்வும். அதிசயமும் நாளை தொடரும்

ஹிந்துவும்,முஸ்லீமும் எனது அனுபவம்

2001,2002 ஆகிய ஆண்டுகளில் நான் அதிகமாக இருந்தது எனது நண்பர் காசிம் வீட்டில்தான் இரவு படுக்க மட்டும் தான் வீட்டிற்க்கு செல்வேன் . அந்த காலகட்டத்தில் தான் முஸ்லீம்களை பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன் .2002 டில் நண்பர் திருநெல்வேலியில் உள்ள ஒரு கேட்ரிங்க் படிப்பிற்க்காக சென்றார் . அவனை பார்க்க அவனின் குடும்பம் ஒருநாள் திருநெல்வேலி சென்றது . அவனை பார்த்து விட்டு ஊருக்கு வந்தனர் . வழக்கம் போல நான் ஒருநாள் காசிம் வீட்டிற்க்கு சென்றேன் .இரண்டாவது மாடியில் குளிர்சாதனபெட்டி உள்ளது. வழக்கம் போல தண்ணீர் குடிக்க மேலே சென்றேன் .அங்கு காசிம் அக்கா இருந்தார்கள் . திடீர் என்று என்னிடம் கோபமாக பேசினார்கள் . வீட்டை விட்டு வெளியே போ என்று காரணம் இல்லாமல் கத்தினார்கள் . நானும் மன வருத்தத்தில் இனி இங்கு வரக்கூடாது .என்று நினைத்து விட்டு வீட்டிற்க்கு வந்தேன் . ஒரு அரைமணி நேரம் கழித்து காசிம் அம்மா எனக்கு போன் செய்தார்கள் .உடனே வீட்டிற்க்கு வாஎன்று நானும் வீட்டிற்க்கு சென்றேன் . வீட்டிற்குள் போகும் போது காசிம் அக்கா உறத்த குரலில் உள்ளே வராதே என்று கத்தினார்கள் . உள்ளே சென்று பார்த்தால் தலை முடியை விரித்து போட்டுக்கொண்டு அக்காவும் சுற்றி பள்ளிவாசலில் ஒதுபவர்களும் .முன்னாள் கூரானும் இருந்தது அப்போது அம்மா அக்காவுக்கு பேய் பிடித்து இருக்கிறது .அதனால் தான் உன்னிடம் காரணம் இல்லாமல் கோபம் பட்டா என்றார்கள் . சிறிது நேரத்தில் அவனை வெளியே அனுப்பு என்று கத்திக்கொண்டு அலறினார்.உடனே நானும் வெளியே வந்து விட்டேன் .பிறகு மூன்று நாட்க்களாக சுமார் 25 பள்ளிவாசலுக்கு கூட்டி சென்றனர் .பலனே இல்லை .காசிம் அக்காவை யாராலும் கட்டுப்படுத்த முடிய வில்லை . பிறகு நடந்த்தை நாளை பார்ப்போம் .அதில்தான் முஸ்லிம்களின் உண்மையான முகம் தெரிந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்